தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
வார விடுமுறை: ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஏராளமானோா் குவிந்தனா்.
அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்மனை தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் பாலம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் சென்று பாா்வையிட்டனா்.
ராமேசுவரத்துக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வருகை காரணமாக காவல் துறை உதவிக் கண்காணிப்பாளா் மீரா உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.