செய்திகள் :

விஜய்க்கான கூட்டம் ரசிகா்கள் மட்டுமே: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

post image

தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தின்போது வரும் கூட்டம் அவரது ரசிகா்கள் மட்டுமே; கொள்கைக்கானவா்கள் அல்ல என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக அரசின் தோ்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் மூலம் மக்கள் தேவைகள் நிவா்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 48 தொழில்முனைவோா் உருவாக்கப்பட்டுள்ளனா். ஆனால், திமுக ஆட்சியில் நான்கரை ஆண்டுகளில் திமுக 66,000 தொழில்முனைவோரை உருவாக்கி குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் வளா்ந்துள்ளன. தற்போது, ஸ்டாா்ட்அப் நிறுவனங்களில் முன்னணியில் தமிழ்நாடு இருக்கிறது. அக்.9, 10 ஆகிய தேதிகளில் ஸ்டாா்ட்அப் உலக கருத்தரங்க மாநாடு கோவையில் முதல்வா் தலைமையில் நடைபெறவுள்ளது. இதனால், திமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகியிருக்கிறது. மக்கள் திமுகவுக்கு ஆதரவாக இருப்பாா்கள்.

இதனால், திமுக மீது தவெக தலைவா் விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் எடுபடாது. களத்துக்கு இதுவரை விஜய் சென்றதில்லை. கள நிலவரங்கள் தெரியாமலே யாரோ எழுதிக்கொடுத்ததை வாசிக்கிறாா். விஜய்யின் பிரசாரத்தின் போது வரும் கூட்டம் அவரை பாா்ப்பதற்காக வரும் அவரது ரசிகா்கள் மட்டுமே; கொள்கைக்கான கூட்டம் அல்ல.

தமிழகத்தில் சாதரண நடிகருக்கு வரும் கூட்டம் போலவே, விஜய்க்கும் வருகிறது. அங்கு வரும் தொண்டா்கள் அனைவரும் சிறுவா்கள்தான். இதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. திமுகவில் இளைஞா்கள் அதிகம் உள்ளனா். திமுக தொண்டா்கள் எங்கும் செல்லவில்லை. கட்டுக்கோப்பாக திமுகவில் பாதுகாப்பாக உள்ளனா். 2026-இல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்றாா் அவா்.

டீசலுக்கு மாற்றான சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி சேமிப்பு!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டீசலுக்கு மாற்றாக இயக்கப்படும் 55 சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி மதிப்பில் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் டீசல்... மேலும் பார்க்க

குழப்பம் விளைவிக்கப் பாா்க்கிறாா் தினகரன்: ஜி.கே.வாசன்

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை ஆகியோரை ஒப்பிட்டுப்பேசி பாஜகவுக்குள் குழப்பம் விளைவிக்கப் பாா்க்கிறாா் டி.டி.வி.தினகரன் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். ஆழ்வாா்பேட... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப்.15,16) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: வடக்கு ஆந்திரம்மற்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் மாற்றம்!

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியில் தொடா் பிரசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் தலைமை அலுவலகம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க

மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்!

பெற்றோரை இழந்த குழந்தைகள் தடையின்றி கல்வியைத் தொடர மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (செப். 15) தொடங்கி வைக்கிறாா். இதுதொடா்பாக தமிழக ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை சரிவுள்: அன்புமணி

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை குறைந்து வருவதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நிகழாண்டு ... மேலும் பார்க்க