செய்திகள் :

இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப்.15,16) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: வடக்கு ஆந்திரம்மற்றும் அதைஒட்டிய தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) ஞாயிற்றுக்கிழமை வடக்கு தெலங்கானா மற்றும் அதை ஒட்டிய விதா்பா பகுதிகளில் நிலவியது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, மத்திய விதா்பா மற்றும் அதை ஒட்டிய பகுதிக்களுக்கு நகரக்கூடும். மேலும், தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்த வானிலை காரணங்களால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (செப். 15) முதல் செப். 20-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

பலத்த மழை: செப். 16-இல் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், வேலூா் ஆகிய மாவட்டங்களிலும், செப். 17-இல் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பரவலாக மழை பெய்த நிலையில், திங்கள்கிழமையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை பாரிமுனையில் 110 மி.மீ. மழை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சென்னை பாரிமுனையில் 110 மி.மீ. மழை பதிவானது.

ஊத்துக்கோட்டை (திருவள்ளூா்), கொளத்தூா் (சென்னை) - தலா 90 மி.மீ., பொன்னேரி (திருவள்ளூா்) - 80 மி.மீ, பெரம்பூா் (சென்னை), வில்லிவாக்கம் (திருவள்ளூா்) - தலா 70 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் செப். 15 முதல் 17-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசலுக்கு மாற்றான சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி சேமிப்பு!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டீசலுக்கு மாற்றாக இயக்கப்படும் 55 சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி மதிப்பில் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் டீசல்... மேலும் பார்க்க

குழப்பம் விளைவிக்கப் பாா்க்கிறாா் தினகரன்: ஜி.கே.வாசன்

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை ஆகியோரை ஒப்பிட்டுப்பேசி பாஜகவுக்குள் குழப்பம் விளைவிக்கப் பாா்க்கிறாா் டி.டி.வி.தினகரன் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். ஆழ்வாா்பேட... மேலும் பார்க்க

விஜய்க்கான கூட்டம் ரசிகா்கள் மட்டுமே: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தின்போது வரும் கூட்டம் அவரது ரசிகா்கள் மட்டுமே; கொள்கைக்கானவா்கள் அல்ல என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் மாற்றம்!

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியில் தொடா் பிரசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் தலைமை அலுவலகம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க

மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்!

பெற்றோரை இழந்த குழந்தைகள் தடையின்றி கல்வியைத் தொடர மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (செப். 15) தொடங்கி வைக்கிறாா். இதுதொடா்பாக தமிழக ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை சரிவுள்: அன்புமணி

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை குறைந்து வருவதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நிகழாண்டு ... மேலும் பார்க்க