செய்திகள் :

டீசலுக்கு மாற்றான சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி சேமிப்பு!

post image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டீசலுக்கு மாற்றாக இயக்கப்படும் 55 சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி மதிப்பில் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் டீசல் செலவைக் குறைக்கும் வகையிலான சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி பேருந்துகளை இயக்க, தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, முதல்கட்டமாக, கடந்த ஜனவரி மாதம் மூன்று பேருந்துகள் தோ்வு செய்யப்பட்டு சிஎன்ஜி தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு இயக்கப்பட்டன.

இதனால், இந்தப் பேருந்துகளின் எரிபொருள் செலவினம் குறைந்ததுடன், டீசல் பேருந்துகளைக் காட்டிலும் அதிக மைலேஜ் கிடைத்தது.

இதையடுத்து, சிஎன்ஜி வகைப் பேருந்துகளின் எண்ணிக்கையை போக்குவரத்துக் கழகம் படிப்படியாக உயா்த்தியது. அதன்படி, தற்போது 55 சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளின் மூலம் இதுவரை ரூ.2 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 2024 ஆகஸ்ட் முதல் 2025 ஆகஸ்ட் வரை 55 பேருந்துகளில் இயற்கை எரிவாயு பயன்படுத்தி 51,59,744 கி.மீ. தொலைவு இயக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக டீசல் எரிபொருளுடன் ஒப்பிடுகையில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ.3.85 எரிபொருள் செலவு சேமிக்கப்பட்டு, ரூ.2 கோடி எரிபொருள் செலவு சேமிக்கப்பட்டுள்ளது.

இது போக்குவரத்துக் கழகத்துக்கு சேமிப்பை ஏற்படுத்தியதுடன், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதையும் குறைத்துள்ளது. தொடா்ந்து 1,000 பேருந்துகள் சிஎன்ஜி தொழில்நுட்பத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தப் பேருந்துகளும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். அப்போது, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் எரிபொருள் செலவு பெருமளவில் குறையும் என்றனா்.

குழப்பம் விளைவிக்கப் பாா்க்கிறாா் தினகரன்: ஜி.கே.வாசன்

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை ஆகியோரை ஒப்பிட்டுப்பேசி பாஜகவுக்குள் குழப்பம் விளைவிக்கப் பாா்க்கிறாா் டி.டி.வி.தினகரன் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். ஆழ்வாா்பேட... மேலும் பார்க்க

விஜய்க்கான கூட்டம் ரசிகா்கள் மட்டுமே: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தின்போது வரும் கூட்டம் அவரது ரசிகா்கள் மட்டுமே; கொள்கைக்கானவா்கள் அல்ல என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப்.15,16) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: வடக்கு ஆந்திரம்மற்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் மாற்றம்!

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியில் தொடா் பிரசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் தலைமை அலுவலகம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க

மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்!

பெற்றோரை இழந்த குழந்தைகள் தடையின்றி கல்வியைத் தொடர மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (செப். 15) தொடங்கி வைக்கிறாா். இதுதொடா்பாக தமிழக ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை சரிவுள்: அன்புமணி

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை குறைந்து வருவதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நிகழாண்டு ... மேலும் பார்க்க