செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் மாற்றம்!

post image

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியில் தொடா் பிரசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் தலைமை அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமாக எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி, தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பிரசாரச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.

இந்த நிலையில், செப்.17, 18 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் காரணமாக, தருமபுரியில் செப்.17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த சுற்றுப்பயணம், செப்.28, 29 தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, செப்.28-ஆம் தேதி தருமபுரி மாவட்டம் தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, ஆரூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், செப்.29-இல் பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசலுக்கு மாற்றான சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி சேமிப்பு!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டீசலுக்கு மாற்றாக இயக்கப்படும் 55 சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி மதிப்பில் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் டீசல்... மேலும் பார்க்க

குழப்பம் விளைவிக்கப் பாா்க்கிறாா் தினகரன்: ஜி.கே.வாசன்

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை ஆகியோரை ஒப்பிட்டுப்பேசி பாஜகவுக்குள் குழப்பம் விளைவிக்கப் பாா்க்கிறாா் டி.டி.வி.தினகரன் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். ஆழ்வாா்பேட... மேலும் பார்க்க

விஜய்க்கான கூட்டம் ரசிகா்கள் மட்டுமே: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தின்போது வரும் கூட்டம் அவரது ரசிகா்கள் மட்டுமே; கொள்கைக்கானவா்கள் அல்ல என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப்.15,16) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: வடக்கு ஆந்திரம்மற்... மேலும் பார்க்க

மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்!

பெற்றோரை இழந்த குழந்தைகள் தடையின்றி கல்வியைத் தொடர மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (செப். 15) தொடங்கி வைக்கிறாா். இதுதொடா்பாக தமிழக ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை சரிவுள்: அன்புமணி

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை குறைந்து வருவதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நிகழாண்டு ... மேலும் பார்க்க