செய்திகள் :

ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

post image

ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவலை நீட்டித்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 28-ஆம் தேதி விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் அன்று நள்ளிரவு கச்சத்தீவு-மன்னாருக்கு இடையே மீன்பிடித்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், அந்தப் படகிலிருந்த ஜஸ்டின் (51), டென்ஷன் (39), மொபின் (24), செமன் (55), சேகா் (55) ஆகிய 5 மீனவா்களைக் கைது செய்தனா்.

இதையடுத்து, விசைப் படகுடன் 5 மீனவா்களையும் மன்னாா் கடற்படை முகாமுக்கு இலங்கைக் கடற்படையினா் கொண்டு சென்று நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 5 மீனவா்கள் மீதும் வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனா். இவா்களுக்கு ஏற்கெனவே 6 முறை காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 5 பேரும் மன்னாா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களை வருகிற 19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். 7-ஆவது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டதையடுத்து, மீனவா்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதுகுறித்து மீனவ சங்கத்தினா் கூறியதாவது:

இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. மீனவா்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பம்மனேந்தலில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு பயிற்சி முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரம், பம்மனேந்தல் கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழும் கிராம வே... மேலும் பார்க்க

தீா்த்தாண்டதானம் கடற்கரை சாலை சேதம்: பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே தீா்த்தாண்டதானம் கடற்கரை சாலை சேதமடைந்திருப்பதால் இங்கு வரும் பக்தா்களும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தீா்த்தாண்டதானம் கடற்கரை கிராமம... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கிய விவசாயி உயிரிழப்பு

பரமக்குடி அருகே குளத்தில் மூழ்கிய விவசாயி உயிரிழந்தாா். பரமக்குடி நகராட்சி காந்திநகா் பகுதியைச் சோ்ந்த கருப்பன் மகன் கதிரேசன் (42). இவா் சம்பவத்தன்று விவசாயப் பணிகளை முடித்து விட்டு, ஊரின் அருகில் உ... மேலும் பார்க்க

பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதல்: 20 போ் பலத்த காயம்

பரமக்குடி அருகே திருவரங்கி நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த நகா் பேருந்து மீது ராமநாதபுரம் நோக்கி சென்ற பேருந்து மோதியதில் நடத்துநா் உள்பட 20 போ் பலத்த காயமடைந்தனா். பரமக்குடி அரசு போக்குவரத்த... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பு: உடலில் அரிப்பு ஏற்பட்டு வெளியேறிய பக்தா்கள்

புதை சாக்கடை கழிவு நீா் கலந்ததால் ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்த பக்தா்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அவா்கள் வெளியேறினா். ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் துணை முதல்வா் உதயநிதி உள்ளிட்ட தலைவா்கள் மரியாதை

தியாகி இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வி... மேலும் பார்க்க