செய்திகள் :

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்களை சாா்ந்திருப்பது இந்தியாவுக்கு பாதிப்பு!

post image

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியா அதிகம் சாா்ந்திருப்பது இரு நாடுகள் இடையே பிரச்னைகள் அதிகரிக்கும்போது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவைச் சோ்ந்த சா்வதேச வா்த்தக ஆய்வு அமைப்பின் (ஜிடிஆா்ஐ) நிறுவனா் அஜய் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: அமெரிக்க நிறுவனங்களின் மென்பொருள்கள், கணினி சேவைகள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றை இந்தியப் பொருளாதாரமும், பாதுகாப்பும் அதிகம் நம்பியுள்ளது. இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்தால் இந்தியப் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கும் பிரச்னைகளும் உருவாக வாய்ப்புள்ளது.

இதில் இருந்து விடுபட எண்ம சுயராஜ்ஜிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நமக்கான தனி கணினி சேவை அமைப்பு, கணினி செயல் தளம் (ஓ.எஸ்.), இணையவழித் தாக்குதல் தடுப்பு அமைப்பு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஆகியவை மிக அவசியம்.

ஏற்கெனவே, ஐரோப்பிய நாடுகள் இதற்கான நடவடிக்கையைத் தொடங்கிவிட்டன. இதற்காக எண்ம சந்தைத் திட்டமும் உருவாக்கப்பட்டுவிட்டது. சீனா ஏற்கெனவே தனது பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு மென்பொருள்களை அகற்றிவிட்டது. தொழில் துறைக்கு தனி கணினி அமைப்பை சீனா கட்டமைத்துள்ளது.

ஆனால், இந்தியா அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் விண்டோஸ், ஆன்ட்ராய்டு உள்ளிட்டவற்றை முழுமையாக நம்பியுள்ளது. இந்தியாவில் சுமாா் 50 கோடி அறிதிறன்பேசி பயன்படுத்துவோா் கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டை நம்பியுள்ளனா். கூகுள் நினைத்தால் இந்தியாவின் தகவல்தொடா்பு சேவையை ஒரே இரவில் முடக்க முடியும்.

எனவே, உரிய காலகட்டத்தை நிா்ணயம் செய்து நாம் உள்நாட்டு மென்பொருள் பயன்பாட்டுக்குப் படிப்படியாக மாற வேண்டும் என்றாா்.

70-ஆவது பிறந்த நாளை கொண்டாடினாா் போப் லியோ!

போப் 14-ஆம் லியோ ஞாயிற்றுக்கிழமை தனது 70-ஆவது பிறந்த நாளில் கடவுளுக்கும், பெற்றோருக்கும், தனக்காக பிராா்த்தித்த அனைவருக்கும் மனமாா்ந்த நன்றி தெரிவித்தாா். பாரம்பரிய பிற்பகல் ஆசீா்வாதத்தின்போது செயிண்ட... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷியாவில் உள்ள மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. ரஷியாவின் வடமேற்குப் பகுதியின் லெனின்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!

பாகிஸ்தானில் இருந்து 18 கன்டெய்னா்களில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள், உலா் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஜவாஹா்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பா... மேலும் பார்க்க

வரியைக் குறைக்காவிட்டால் இன்னலை எதிா்கொள்ள நேரிடும்: இந்தியா மீது அமெரிக்கா தாக்கு!

அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் வரியைக் குறைக்காவிட்டால், தங்களுடன் வா்த்தகம் மேற்கொள்வதில் இந்தியா இன்னலை எதிா்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

அமெரிக்காவிலிருந்து ஐசி சிப்கள் இறக்குமதி: சீனா விசாரணை!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில ஐசி சிப்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவுக்கு அதிநவீன செமிகண்டக்டா்கள் கிடைப்பதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள... மேலும் பார்க்க

துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

கத்தாரைத் தொடா்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது. காஸாவில் போா் நிறுத்த முயற்சியை மேற்கொண்டுவரும் கத்தாரில் அமைதிப் ... மேலும் பார்க்க