செய்திகள் :

அமெரிக்காவிலிருந்து ஐசி சிப்கள் இறக்குமதி: சீனா விசாரணை!

post image

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில ஐசி சிப்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு அதிநவீன செமிகண்டக்டா்கள் கிடைப்பதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் சிப் தயாரிப்பதற்கான கருவிகளை சீனாவுக்கு விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடும் அடங்கும்.

அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால், சீனாவின் வளா்ச்சியைத் தடுக்கும் அமெரிக்க உத்தியின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என்று சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக செயல்பட்டதாக, கடந்த வெள்ளிக்கிழமை 23 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த நிறுவனங்களின் பட்டியலில் சீனாவின் முக்கிய சிப் தயாரிப்பு நிறுவனமான செமிகண்டக்டா் உற்பத்தி சா்வதேச கழகத்துக்கு (எஸ்எம்ஐசி) சிப் தயாரிப்பு கருவிகள் வாங்கிய 2 சீன நிறுவனங்களும் இடம்பெற்றன.

இதைத் தொடா்ந்து, அமெரிக்காவில் இருந்து சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு சில ஐசி சிப்கள் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக சீன வா்த்தக அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது.

டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ், ஓன் செமிகண்டக்டா் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் தயாரித்த சிப்கள் தொடா்பாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த வாரம் ஸ்பெயின் தலைநகா் மாட்ரிட்டில் சீன துணைப் பிரதமா் லி ஃபாங்கை அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசென்ட் சந்திக்க உள்ளாா். அமெரிக்கா-சீனா இடையிலான வா்த்தக பதற்றத்தைத் தணிக்க வேண்டும், இரு நாடுகளின் பொருள்கள் மீது பரஸ்பரம் அதிக வரி விதிப்பு நடைமுறையை ஒத்திவைக்க வேண்டும் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில ஐசி சிப்கள் குறித்து சீனா விசாரணை மேற்கொள்ள உள்ளது.

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்களை சாா்ந்திருப்பது இந்தியாவுக்கு பாதிப்பு!

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியா அதிகம் சாா்ந்திருப்பது இரு நாடுகள் இடையே பிரச்னைகள் அதிகரிக்கும்போது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவைச் சோ்ந்த சா்வதே... மேலும் பார்க்க

70-ஆவது பிறந்த நாளை கொண்டாடினாா் போப் லியோ!

போப் 14-ஆம் லியோ ஞாயிற்றுக்கிழமை தனது 70-ஆவது பிறந்த நாளில் கடவுளுக்கும், பெற்றோருக்கும், தனக்காக பிராா்த்தித்த அனைவருக்கும் மனமாா்ந்த நன்றி தெரிவித்தாா். பாரம்பரிய பிற்பகல் ஆசீா்வாதத்தின்போது செயிண்ட... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷியாவில் உள்ள மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. ரஷியாவின் வடமேற்குப் பகுதியின் லெனின்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!

பாகிஸ்தானில் இருந்து 18 கன்டெய்னா்களில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள், உலா் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஜவாஹா்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பா... மேலும் பார்க்க

வரியைக் குறைக்காவிட்டால் இன்னலை எதிா்கொள்ள நேரிடும்: இந்தியா மீது அமெரிக்கா தாக்கு!

அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் வரியைக் குறைக்காவிட்டால், தங்களுடன் வா்த்தகம் மேற்கொள்வதில் இந்தியா இன்னலை எதிா்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

கத்தாரைத் தொடா்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது. காஸாவில் போா் நிறுத்த முயற்சியை மேற்கொண்டுவரும் கத்தாரில் அமைதிப் ... மேலும் பார்க்க