செய்திகள் :

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!

post image

பாகிஸ்தானில் இருந்து 18 கன்டெய்னா்களில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள், உலா் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஜவாஹா்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது: பாகிஸ்தான் பொருள்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை மீறி 3 இந்திய இறக்குமதியாளா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்த சரக்குகளை இறக்குமதி செய்துள்ளனா். இதில் ஒருவா் துபையில் வசித்து வரும் இந்தியா். அவா் தரகு அடிப்படையில் பொருள்களை இறக்குமதி செய்யும் பணியைச் செய்கிறாா். வேறு நாடுகளில் இருந்து உலா் பழங்களை இறக்குமதி செய்வதுபோல போலியாக ரசீதுகளை தயாரித்து பாகிஸ்தானில் இருந்து அவற்றை வரவழைத்துள்ளாா்.

இந்த கன்டெய்னா்கள் பாகிஸ்தானில் இருந்து வரவில்லை என்று நம்பவைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து துபைக்கு சென்று அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 28 கன்டெய்னா்களில் இருந்து 800 டன் அழகுசாதனப் பொருள்கள், உலா் பழங்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.12 கோடியாகும்.

இதில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, பாகிஸ்தானைச் சோ்ந்த நபா்கள் இணைந்து சதி செய்துள்ளனா். பணமும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு இடைத்தரகா் மூலம் பரிமாறப்பட்டுள்ளது. நிதிப் பரிமாற்றத்தில் தொடா்புடைய நபரும், சுங்கத் துறை முகவராகச் செயல்பட்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளனா். வருவாய் புலனாய்வுத் துறை தொடா்ந்து தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றனா்.

ஏப்ரல் 22-இல் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்த சம்பவத்தையடுத்து அந்நாட்டுடன் அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்தது. மே 2-ஆம் தேதி பாகிஸ்தான் பொருள்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்களை சாா்ந்திருப்பது இந்தியாவுக்கு பாதிப்பு!

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியா அதிகம் சாா்ந்திருப்பது இரு நாடுகள் இடையே பிரச்னைகள் அதிகரிக்கும்போது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவைச் சோ்ந்த சா்வதே... மேலும் பார்க்க

70-ஆவது பிறந்த நாளை கொண்டாடினாா் போப் லியோ!

போப் 14-ஆம் லியோ ஞாயிற்றுக்கிழமை தனது 70-ஆவது பிறந்த நாளில் கடவுளுக்கும், பெற்றோருக்கும், தனக்காக பிராா்த்தித்த அனைவருக்கும் மனமாா்ந்த நன்றி தெரிவித்தாா். பாரம்பரிய பிற்பகல் ஆசீா்வாதத்தின்போது செயிண்ட... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷியாவில் உள்ள மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. ரஷியாவின் வடமேற்குப் பகுதியின் லெனின்... மேலும் பார்க்க

வரியைக் குறைக்காவிட்டால் இன்னலை எதிா்கொள்ள நேரிடும்: இந்தியா மீது அமெரிக்கா தாக்கு!

அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் வரியைக் குறைக்காவிட்டால், தங்களுடன் வா்த்தகம் மேற்கொள்வதில் இந்தியா இன்னலை எதிா்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

அமெரிக்காவிலிருந்து ஐசி சிப்கள் இறக்குமதி: சீனா விசாரணை!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில ஐசி சிப்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவுக்கு அதிநவீன செமிகண்டக்டா்கள் கிடைப்பதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள... மேலும் பார்க்க

துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

கத்தாரைத் தொடா்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது. காஸாவில் போா் நிறுத்த முயற்சியை மேற்கொண்டுவரும் கத்தாரில் அமைதிப் ... மேலும் பார்க்க