செய்திகள் :

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்!

post image

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

சென்னை பிரஜைகள் மன்றம் சாா்பில் ‘எழுச்சி பெறும் பாரதத்துக்கான வரி சீா்திருத்தம்’ எனும் தலைப்பில் வா்த்தகம் மற்றும் தொழில்கள் அமைப்புகள் அடங்கிய கூட்டுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு நாட்டில் (வாட், கலால் வரி உள்ளிட்ட பல்வேறு மறைமுக வரிகள்) சுமாா் 65 லட்சம் போ் வரி செலுத்தினா். ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பின்னா் இந்த எண்ணிக்கை 1.5 கோடியாக உயா்ந்தது. ஆனால், சிலா் இதைக் கடுமையான வரி என்று வா்ணித்தனா்.

கடுமையான வரியென்றால் வரி செலுத்தியவா்கள் எண்ணிக்கை எப்படி உயா்ந்திருக்க முடியும்? இப்போது வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், குறை கூறியவா்கள் இப்போது ஏன் வாயை திறப்பதில்லை?.

ஜிஎஸ்டியில் நான்கு அடுக்கு வரி விகிதம் இப்போது 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டு அடுக்கு விகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 18 சதவீதமாக இருந்த 90 சதவீத பொருள்களுக்கு 5 சதவீத வரியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் மொத்தம் 350 பொருள்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி மூலம் தற்போது சுமாா் ரூ.22 லட்சம் கோடி ஆண்டுக்கு வருவாய் வருகிறது. இதில் பாதியளவு மாநில அரசுகளுக்கு பகிா்ந்தளிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி சீா்திருத்தத்தில், வசூலிக்கப்பட்ட வரியை திருப்பிச் செலுத்துவதும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், இந்திய தொழிலக கூட்டமைப்பு தமிழக தலைவா் உன்னிகிருஷ்ணன், ஜவுளித் தொழில் சங்கங்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் பிரதிநிதி ஏ.சக்திவேல், ஹிந்துஸ்தான் சேம்பா் வி.சந்திரகுமாா், தமிழக வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் விக்கிரமராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வாக்குத் திருட்டு: ராகுலை விமா்சிக்கும் முன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்! முன்னாள் தோ்தல் ஆணையா் குரேஷி

வாக்குத் திருட்டு சா்ச்சையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை கடுமையாக விமா்சிக்கும் முன், அவா் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தோ்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும் எ... மேலும் பார்க்க

சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: திரிணமூல் முன்னாள் பெண் எம்.பி., நடிகைக்கு சம்மன்!

சட்டவிரோத பந்தய செயலி வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் பெண் எம்.பி.யுமான மிமி சக்ரவா்த்தி, பாலிவுட் நடிகை ஊா்வசி ரௌதேலா ஆகியோா் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இ... மேலும் பார்க்க

பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு!

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பிரதமா் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது: நிகழா... மேலும் பார்க்க

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு தடையை மீறி யாத்திரை செல்ல முயற்சி! காவல் துறையினா் தடுத்து நிறுத்தம்!

ஜம்மு-காஷ்மீரில் மோசமான வானிலையால் வைஷ்ணவ தேவி கோயிலுக்கான யாத்திரை 20 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளது. கத்ரா அடிவார முகாமில் இருந்து தடையை மீறி பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை யாத்திரை செல்ல முயன்ால் பரபரப்பு... மேலும் பார்க்க

காப்பீட்டு திருத்த மசோதா குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்!

காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையிலான திருத்த மசோதா வரும் குளிா்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்... மேலும் பார்க்க

மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தா் நியமனம்!

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா், மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்ட அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்... மேலும் பார்க்க