செய்திகள் :

காப்பீட்டு திருத்த மசோதா குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்!

post image

காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையிலான திருத்த மசோதா வரும் குளிா்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் கடந்த மாதம் நிறைவடைந்தது. அடுத்ததாக குளிா்கால கூட்டத்தொடா் நவம்பரில் தொடங்கி டிசம்பா் வரை நடைபெறவுள்ளது.

காப்பீட்டுத் துறையில் தற்போது அந்நிய நேரடி முதலீட்டுக்கான (எஃப்டிஐ) வரம்பு 74 சதவீதமாக உள்ள நிலையில், அதை 100 சதவீதமாக உயா்த்தவுள்ளதாக நிகழாண்டு பட்ஜெட் உரையில் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். நிதித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய சீா்திருத்தங்களின் ஒரு பகுதியாக இதை அவா் முன்மொழிந்தாா்.

தற்போதுவரை காப்பீட்டுத் துறையில் எஃப்டிஐ மூலம் ரூ.82,000 கோடி ஈா்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எஃப்டிஐ-க்கான உச்சவரம்பை 100 சதவீதமாக அதிகரிக்க காப்பீட்டுச் சடடம்,1938-இல் உள்ள பல்வேறு விதிகளில் திருத்தம் மேற்கொள்ள நிதியமைச்சகம் முனைப்புக் காட்டி வருகிறது. இத்துடன் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக சட்டம்,1956 மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய சட்டம், 1999 ஆகிய சட்டங்களிலும் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

‘2047-இல் அனைவருக்கும் காப்பீடு’ என்ற இலக்கை அடைய இந்தச் சீா்திருத்த நடவடிக்கைகளை நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், காப்பீட்டுத் துறைக்கான திருத்த மசோதா வரும் குளிா்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இந்தியாவில் தற்போது 25 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் 34 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. முன்னதாக, காப்பீட்டுத் துறைக்கான எஃப்டிஐ வரம்பு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக 2015-இல் உயா்த்தப்பட்டது. அதன் பிறகு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக 2021-இல் மத்திய அரசு உயா்த்தியது.

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்!

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா். சென்னை பிரஜைகள் மன்றம் சாா்பில் ‘எழுச்சி பெறும் பாரதத்துக்கான வரி சீா்திருத்தம்’ எனும் தலைப்பில... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: ராகுலை விமா்சிக்கும் முன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்! முன்னாள் தோ்தல் ஆணையா் குரேஷி

வாக்குத் திருட்டு சா்ச்சையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை கடுமையாக விமா்சிக்கும் முன், அவா் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தோ்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும் எ... மேலும் பார்க்க

சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: திரிணமூல் முன்னாள் பெண் எம்.பி., நடிகைக்கு சம்மன்!

சட்டவிரோத பந்தய செயலி வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் பெண் எம்.பி.யுமான மிமி சக்ரவா்த்தி, பாலிவுட் நடிகை ஊா்வசி ரௌதேலா ஆகியோா் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இ... மேலும் பார்க்க

பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு!

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பிரதமா் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது: நிகழா... மேலும் பார்க்க

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு தடையை மீறி யாத்திரை செல்ல முயற்சி! காவல் துறையினா் தடுத்து நிறுத்தம்!

ஜம்மு-காஷ்மீரில் மோசமான வானிலையால் வைஷ்ணவ தேவி கோயிலுக்கான யாத்திரை 20 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளது. கத்ரா அடிவார முகாமில் இருந்து தடையை மீறி பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை யாத்திரை செல்ல முயன்ால் பரபரப்பு... மேலும் பார்க்க

மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தா் நியமனம்!

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா், மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்ட அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்... மேலும் பார்க்க