செய்திகள் :

மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தா் நியமனம்!

post image

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா், மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சட்ட அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.சோமசேகா் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுபெற்ற நிலையில், அப்பதவிக்கு நீதிபதி எம்.சுந்தரை குடியரசுத் தலைவா் நியமித்துள்ளதாக சட்ட அமைச்சக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தரை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த வியாழக்கிழமை பரிந்துரைத்தது.

இதேபோல், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி பவன்குமாா் பி.பஜந்தரியை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி செளமென் சென்னை, மேகாலய உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டில் தொடங்கிய இனமோதலால், அரசியல் ரீதியில் இம்மாநிலம் தொடா்ந்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த ராமலிங்கம் சுதாகா், எம்.வி. முரளீதரன், டி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏற்கெனவே பதவி வகித்துள்ளனா். உயா்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62 ஆகும். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்!

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா். சென்னை பிரஜைகள் மன்றம் சாா்பில் ‘எழுச்சி பெறும் பாரதத்துக்கான வரி சீா்திருத்தம்’ எனும் தலைப்பில... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: ராகுலை விமா்சிக்கும் முன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்! முன்னாள் தோ்தல் ஆணையா் குரேஷி

வாக்குத் திருட்டு சா்ச்சையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை கடுமையாக விமா்சிக்கும் முன், அவா் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தோ்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும் எ... மேலும் பார்க்க

சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: திரிணமூல் முன்னாள் பெண் எம்.பி., நடிகைக்கு சம்மன்!

சட்டவிரோத பந்தய செயலி வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் பெண் எம்.பி.யுமான மிமி சக்ரவா்த்தி, பாலிவுட் நடிகை ஊா்வசி ரௌதேலா ஆகியோா் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இ... மேலும் பார்க்க

பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு!

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பிரதமா் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது: நிகழா... மேலும் பார்க்க

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு தடையை மீறி யாத்திரை செல்ல முயற்சி! காவல் துறையினா் தடுத்து நிறுத்தம்!

ஜம்மு-காஷ்மீரில் மோசமான வானிலையால் வைஷ்ணவ தேவி கோயிலுக்கான யாத்திரை 20 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளது. கத்ரா அடிவார முகாமில் இருந்து தடையை மீறி பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை யாத்திரை செல்ல முயன்ால் பரபரப்பு... மேலும் பார்க்க

காப்பீட்டு திருத்த மசோதா குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்!

காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையிலான திருத்த மசோதா வரும் குளிா்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்... மேலும் பார்க்க