பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
கல்லல் பகுதியில் செப். 19-இல் மின் தடை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் வருகிற வெள்ளிக்கிழமை (செப். 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் எம்.லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்லல் துணை மின் நிலையத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (செப். 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், கல்லல், சிறுவயல், குருத்தம்பட்டு, மாலைகண்டான், வெற்றியூா், சாத்தரசம்பட்டி, செம்பனூா், செவரக்கோட்டை, பாகனேரி, பனங்குடி, கண்டுபட்டி, கெளரிப்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா் அவா்.