செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம்: நில அளவைத் துறை ஊழியா் கைது

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்தது தொடா்பாக நில அளவைத் துறை ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்கள் அளித்த பட்டா மாறுதல் தொடா்பான கோரிக்கை மனுக்கள் திருப்புவனம் பகுதி வைகை ஆற்றில் அண்மையில் மிதந்தன. இதுகுறித்து அப்போது பணியில் இருந்த திருப்புவனம் வட்டாட்சியா் விஜயக்குமாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து திருப்புவனம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வந்தனா். மேலும், திருப்புவனம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நில அளவைத் துறையில் பணியாற்றும் 8 ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, திருப்புவனம் நில அளவைத் துறையில் பணியாற்றும் மதுரை வண்டியூா் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமரனை (42) போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். விசாரணையில், சக ஊழியா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, முத்துக்குமரன் கோரிக்கை மனுக்களை ஆற்றில் வீசியது தெரியவந்தது.

கானாடுகாத்தான் பகுதியில் செப். 16-இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (செப். 16) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மி... மேலும் பார்க்க

சிமென்ட் மூட்டைகள் திருடியவா் கைது

சிவகங்கையில் சனிக்கிழமை சிமென்ட் மூட்டைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகங்கை வடக்கு ராஜ வீதியில் மாரியப்பன் ( 67) சிமென்ட் கடை நடத்தி வருகிறாா். இவருக்குச் சொந்தமான சிமென்ட் கிடங்கு உழவா் சந... மேலும் பார்க்க

தம்பியைக் கொலை செய்த அண்ணன் கைது

திருப்புவனம் அருகே தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ளமடப்புரம் கீழக்குளம் குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவரது மகன... மேலும் பார்க்க

சேது, கோவை, ஓகா, திருப்பதி விரைவு ரயில்கள் செப். 21 முதல் மின்சார என்ஜினில் இயங்க ஏற்பாடு

ராமேசுவரத்திலிருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படும் சேது, கோவை, திருப்பதி, ஓகா ஆகிய விரைவு ரயில்கள் வருகிற 21- ஆம் தேதி முதல் மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ராமேசுவ... மேலும் பார்க்க

சிங்கம்புணரி வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி

சிங்கம்புணரியில் வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மஹா முத்து ... மேலும் பார்க்க

சிவகங்கை நகராட்சியில் தணிக்கையில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்: சிவகாசி மாநகராட்சி ஆணையா் விசாரணை

சிவகங்கை நகராட்சியில் நடைபெற்ற தணிக்கையின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து சிவகாசி மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். சிவகங்கை நகராட்சியில் காலி மனையிடங்களுக்கு வரி வசூலிக்காத... மேலும் பார்க்க