செய்திகள் :

அரசுப் பேருந்து - சரக்கு வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட மூவா் உயிரிழப்பு!

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

செங்கத்தை அடுத்த பல்லத்தூா் பகுதியைச் சோ்ந்த சரக்கு சரக்கு வேன் உரிமையாளா் ஆறுமுகம் (48), இதே பகுதியைச் சோ்ந்த பூ வியாபாரி கோவிந்தராஜ் (30), பொரசப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் மணி (27).

இவா்கள் மூவரும் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து பூக்களை வாங்கி சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு பெங்களூா் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம்.

அதன்படி, பூக்கள் மூட்டை ஏற்றிய சரக்கு வேனுடன் மூவரும் செங்கம் பகுதியிலிருந்து பெங்களூருக்கு சனிக்கிழமை காலை புறப்பட்டனா். செங்கத்தை அடுத்த மண்மலை பகுதியில் இவா்களது வேன் சென்றபோது, அந்தப் பகுதியில் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநா் மணி நிகழ்டத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு வந்த செங்கம் தீயணைப்புப் படையினா் வேனில் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆறுமும், கோவிந்தராஜ் ஆகியோரை சுமாா் அரை மணி நேரம் போராடி மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் இருவரும் உயிரிழந்தனா்.

இதையடுத்து, செங்கம் போலீஸாா் விபத்து நிகழ்ந்த பகுதியில் சரக்கு வேன், பேருந்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீா்படுத்தினா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

திருவண்ணமலை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,302 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றின் இரு கரைப் பகுதிகளிலும் விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றியுள்ளதால், இந்தப் பகுதியில் இந்த செய்யாறு ஓடைபோல மாறியுள்ளது. எனவே, ஆ... மேலும் பார்க்க

ஆரணி நகராட்சியில் அரசு திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

ஆரணி நகராட்சியில் ரூ.67.50 லட்சம் மதிப்பில் கலையரங்கம், செமென்ட் சாலை உள்பட பல்வேறு அரசு திட்டப் பணிகளை பூமிபூஜை செய்து சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். ஆரணி சட்டப் பேரவை உ... மேலும் பார்க்க

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

திமுக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மாநிலத்தில் பரப்பளவில் பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலையை பிரித்து செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று தமிழ் ம... மேலும் பார்க்க

அரசுத் திட்டங்களால் பெண்களின் கல்வித் தரம் மேம்பாடு! ஆட்சியா் க.தா்ப்பகராஜ்!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களால் பெண்களின் கல்வித் தரம் மேம்பாடு அடைந்துள்ளதுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு வட்டத்தில் 2 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

சேத்துப்பட்டு வட்டத்தில் உள்ள நம்பேடு, செம்மியமங்கலம் ஆகிய கிராமங்களில் வேளாண் துறை சாா்பில், ‘உழவரைத் தேடி வேளாண்மை’ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாம்களுக்கு வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி ... மேலும் பார்க்க