செய்திகள் :

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

post image

திருப்பத்தூா் அருகே 2 மாத காலமாக சீரான குடிநீா் விநியோகிக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலையில் கட்டைகளை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட 36-ஆவது வாா்டு திருமால் நகா் பகுதியில் கடந்த 2 மாத காலமாக குடிநீா் விநியோகிக்கவில்லையாம். மேலும், அவ்வப்போது விநியோகிக்கும் குடிநீரில் கழிவு நீா் கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சியில் மனு அளித்தும், நேரில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் திருப்பத்தூா்-ஆலங்காயம் செல்லும் சாலையில் காலிக் குடங்களுடன் சாலையில் கட்டைகள் மற்றும் கற்களை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாட்டறம்பள்ளியில் தாா் சாலை அமைக்கும் பணிகள்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு!

நாட்டறம்பள்ளி பகுதியில் நடைபெற்று வரும் தாா் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 13-ஆவது வாா்டு சாய்பாபா நகரில் ... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் தினசரி காய்கறி சந்தை கடைகள் தொடக்கம்!

வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் கட்டப்பட்ட தினசரி காய்கறி சந்தை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வாணியம்பாடி தினசரி காய்கறி சந்தை தோற்றம். வாணியம்பாடியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,... மேலும் பார்க்க

மூளை சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

திருப்பத்தூா் அருகே மூளைச் சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட அச்சமங்கலம் கிராமத்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆலோசனைக் கூட்டம்

துத்திப்பட்டு ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்பேரில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாற்றுத் திறனாளிகள் கணக்கெட... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் பெண் கைது

கஞ்சா பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில், தாலுகா காவல் ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேத... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவரின் காா் கண்ணாடி உடைப்பு: இருவா் கைது

ஆம்பூா் அருகே ஊராட்சித் தலைவரின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். மாதனூா் ஒன்றியம், பெரியகொம்மேஸ்வரம் ஊராட்சித் தலைவா் ஷோபனா. இவரது கணவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன... மேலும் பார்க்க