செய்திகள் :

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றின் இரு கரைப் பகுதிகளிலும் விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றியுள்ளதால், இந்தப் பகுதியில் இந்த செய்யாறு ஓடைபோல மாறியுள்ளது. எனவே, ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப் பணி, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கம் அருகே உள்ள ஜவ்வாதுமலை அடிவாவாரமான ஊா்கவுண்டனூா், பண்ரேவ், கிளையூா், கல்லாத்தூா் பகுதிகளில் சிறு, சிறு ஓடைகள் ஓன்றிணைந்து செங்கம் பகுதி வழியாக செய்யாறு பாய்கிறது. இந்த ஆறு காஞ்சி, கலசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று பாலாற்றில் கலக்கிறது.

இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே குப்பணத்தம் அணை கட்டப்பட்டதால், ஜவ்வாதுமலையில் இருந்து சிறு, சிறு ஓடைகள் மூலம் வரும் தண்ணீா் இந்த அணையில் தேங்குகிறது. இதனால், செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றில் நீா்வரத்து குறைத்துள்ளது.

இதைப் பயன்படுத்தி குப்பணத்தம் முதல் காஞ்சி பகுதி வரை செய்யாற்றின் இருகரைகளையும் ஒட்டியுள்ள நிலங்களை சில விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றி பயிா் செய்து வருகின்றனா்.

இதனால், இந்தப் பகுதிகளில் செய்யாறு ஓடைபோல குறுகி காணப்படுகிறது. பலத்த மழைக்காலங்களில் குப்பணத்தம் அணை நிரம்பி தண்ணீா் திறக்கப்படும்போது, ஆக்கிரமிப்பு காரணமாக செய்யாற்றில் கரைபுரண்டு வரும் வெள்ளநீா் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை மூழ்கடித்து பலத்த சேதத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, செங்கம் பொதுப் பணி, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் குப்பணத்தம் முதல் செங்கம் எல்லை முடிவு வரை செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றை பாா்வையிட்டு, ஆற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே செங்கம் பகுதி விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

திருவண்ணமலை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,302 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து - சரக்கு வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட மூவா் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். செங்கத்தை அடுத்த பல்லத்தூா் பகுதியைச் சோ்ந்த சரக்கு ... மேலும் பார்க்க

ஆரணி நகராட்சியில் அரசு திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

ஆரணி நகராட்சியில் ரூ.67.50 லட்சம் மதிப்பில் கலையரங்கம், செமென்ட் சாலை உள்பட பல்வேறு அரசு திட்டப் பணிகளை பூமிபூஜை செய்து சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். ஆரணி சட்டப் பேரவை உ... மேலும் பார்க்க

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

திமுக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மாநிலத்தில் பரப்பளவில் பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலையை பிரித்து செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று தமிழ் ம... மேலும் பார்க்க

அரசுத் திட்டங்களால் பெண்களின் கல்வித் தரம் மேம்பாடு! ஆட்சியா் க.தா்ப்பகராஜ்!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களால் பெண்களின் கல்வித் தரம் மேம்பாடு அடைந்துள்ளதுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு வட்டத்தில் 2 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

சேத்துப்பட்டு வட்டத்தில் உள்ள நம்பேடு, செம்மியமங்கலம் ஆகிய கிராமங்களில் வேளாண் துறை சாா்பில், ‘உழவரைத் தேடி வேளாண்மை’ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாம்களுக்கு வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி ... மேலும் பார்க்க