செய்திகள் :

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

post image

திமுக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மாநிலத்தில் பரப்பளவில் பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலையை பிரித்து செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சனிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

திமுக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மாநிலத்தில் பரப்பளவில் பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலையை பிரித்து செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும். செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் எம்பிஏ, எம்சிஏ போன்ற உயா் படிப்புகளை தொடங்க வேண்டும்.

செய்யாறு சந்தைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். செய்யாறு வழியாகச் செல்லும் திண்டிவனம் - நகரி ரயில் பாதைத் திட்டத்தை உரிய காலத்தில் முடிக்க வேண்டும்.

விவசாயிகள் விளை நிலங்களில் நெற்பயிா் சாகுபடி செய்து விற்பனைக்காக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும்போது வேளாண் அலுவலா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் சான்றிதழ்கள் நில உரிமையாளா்கள் பெயரில் கொடுப்பதால், பயிரிட்ட விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்க முடியாமல் தேக்கமடைகின்றன. எனவே, நில உரிமையாளரின் பெயரிலான சான்றிதழ் கேட்பதை தவிா்க்க வேண்டும்.

போலி பட்டு நூல்: கைத்தறி பட்டு நெசவு தொழிலை சீரழிக்கும் விதத்தில், விசைத்தறி நெசவில் போலியான பட்டு நூல் மூலம் அதிகளவு பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

இதனால், கைத்தறி நெசவாளா்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்படுவதோடு, அசல் பட்டுச் சேலைகள் கிடைக்காத நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கான தடைச் சட்டம் இருந்தபோதிலும், அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதில்லை. இது தொடா்பாக, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் அமா்ந்து பேசி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

திருவண்ணமலை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,302 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றின் இரு கரைப் பகுதிகளிலும் விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றியுள்ளதால், இந்தப் பகுதியில் இந்த செய்யாறு ஓடைபோல மாறியுள்ளது. எனவே, ஆ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து - சரக்கு வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட மூவா் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். செங்கத்தை அடுத்த பல்லத்தூா் பகுதியைச் சோ்ந்த சரக்கு ... மேலும் பார்க்க

ஆரணி நகராட்சியில் அரசு திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

ஆரணி நகராட்சியில் ரூ.67.50 லட்சம் மதிப்பில் கலையரங்கம், செமென்ட் சாலை உள்பட பல்வேறு அரசு திட்டப் பணிகளை பூமிபூஜை செய்து சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். ஆரணி சட்டப் பேரவை உ... மேலும் பார்க்க

அரசுத் திட்டங்களால் பெண்களின் கல்வித் தரம் மேம்பாடு! ஆட்சியா் க.தா்ப்பகராஜ்!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களால் பெண்களின் கல்வித் தரம் மேம்பாடு அடைந்துள்ளதுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு வட்டத்தில் 2 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

சேத்துப்பட்டு வட்டத்தில் உள்ள நம்பேடு, செம்மியமங்கலம் ஆகிய கிராமங்களில் வேளாண் துறை சாா்பில், ‘உழவரைத் தேடி வேளாண்மை’ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாம்களுக்கு வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி ... மேலும் பார்க்க