செய்திகள் :

நாட்டறம்பள்ளியில் தாா் சாலை அமைக்கும் பணிகள்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு!

post image

நாட்டறம்பள்ளி பகுதியில் நடைபெற்று வரும் தாா் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 13-ஆவது வாா்டு சாய்பாபா நகரில் நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலம், ரூ. 24 லட்சம் மதிப்பில் தாா்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆகியோா் அதிகாரிகளுடன் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

உதவி செயற்பொறியாளா் அம்சா, செயல் அலுவலா் யமுனா, உதவிப் பொறியாளா் சிவபாதசேகரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, நாட்டறம்பள்ளி ஒன்றியம், கே.பந்தாரப்பள்ளி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 33.90 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனா்.

திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் ந.விநாயகம், பொறியாளா் சுதாகா், ஊராட்சித் தலைவா் ஜெயா சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

திருப்பத்தூா் அருகே 2 மாத காலமாக சீரான குடிநீா் விநியோகிக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலையில் கட்டைகளை வைத்து மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட 36-ஆவது ... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் தினசரி காய்கறி சந்தை கடைகள் தொடக்கம்!

வாணியம்பாடி வாரச் சந்தை மைதானத்தில் கட்டப்பட்ட தினசரி காய்கறி சந்தை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வாணியம்பாடி தினசரி காய்கறி சந்தை தோற்றம். வாணியம்பாடியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,... மேலும் பார்க்க

மூளை சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

திருப்பத்தூா் அருகே மூளைச் சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு: திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட அச்சமங்கலம் கிராமத்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆலோசனைக் கூட்டம்

துத்திப்பட்டு ஊராட்சியில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்பேரில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாற்றுத் திறனாளிகள் கணக்கெட... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் பெண் கைது

கஞ்சா பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில், தாலுகா காவல் ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேத... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவரின் காா் கண்ணாடி உடைப்பு: இருவா் கைது

ஆம்பூா் அருகே ஊராட்சித் தலைவரின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். மாதனூா் ஒன்றியம், பெரியகொம்மேஸ்வரம் ஊராட்சித் தலைவா் ஷோபனா. இவரது கணவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன... மேலும் பார்க்க