செய்திகள் :

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

post image

திருவண்ணமலை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,302 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மையத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான மதுசூதனன் தொடங்கிவைத்தாா்.

இதில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான எம்.தண்டபாணி கலந்துகொண்டு, தீா்வு காணப்பட்ட மோட்டாா் வாகன விபத்து காப்பீடு வழக்கில் ரூ.52 லட்சத்துக்கான உத்தரவு ஆணையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

மேலும், திருவண்ணாமலை மாவட்ட சமரச மையத்தில் சிறப்பாக பணியாற்றி வழக்குகளை முடித்த 7 சமரசா்களுக்கு சமரச மற்றும் நல்லிணக்கம் மைய திட்டக்குழு, உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தாா்.

நிகழ்வில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆா்.நாகாகுமாா், வழக்குரைஞா்கள் ஐ.சேகா், கே.வி.மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஆரணியில்...: ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு ஆரணி கூடுதல் மாவட்ட நீதிபதியும், விரைவு வழி நீதிபதியுமான சி.ஜெயஸ்ரீ தலைமை வகித்தாா். ஆரணி கூடுதல் மாவட்ட நீதிபதியும், சாா்பு நீதிபதியுமான எஸ்.பாஸ்கரன், மாவட்ட உரிமையில் நீதிபதி டி.கோப்பெருந்தேவி, நீதித்துறை நடுவா் எம்.பிரபு நிவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், பத்திர, பாண்டு வழக்குகள் மற்றும் குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகள் என 316 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, ரூ.2,38,87,368-க்கு தீா்வு காணப்பட்டது. இதில், ஆரணி வழக்குரைஞா் சங்கத் தலைவா் டி.திருஞானம், துணைத் தலைவா்கள் எஸ்.ஷ்யாசுந்தா், எஸ்.பாலாஜி, செயலா் சி.விநாயகம், பொருளாளா் சண்முகம், அரசு வழக்குரைஞா் கே.ஆா்.ராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாவட்டம் முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1,302 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.9 கோடியே 95 லட்சத்து 89 ஆயிரத்து 906-க்கு தீா்வு காணப்பட்டது.

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றின் இரு கரைப் பகுதிகளிலும் விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றியுள்ளதால், இந்தப் பகுதியில் இந்த செய்யாறு ஓடைபோல மாறியுள்ளது. எனவே, ஆ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து - சரக்கு வேன் மோதல்: ஓட்டுநா் உள்பட மூவா் உயிரிழப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். செங்கத்தை அடுத்த பல்லத்தூா் பகுதியைச் சோ்ந்த சரக்கு ... மேலும் பார்க்க

ஆரணி நகராட்சியில் அரசு திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

ஆரணி நகராட்சியில் ரூ.67.50 லட்சம் மதிப்பில் கலையரங்கம், செமென்ட் சாலை உள்பட பல்வேறு அரசு திட்டப் பணிகளை பூமிபூஜை செய்து சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். ஆரணி சட்டப் பேரவை உ... மேலும் பார்க்க

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

திமுக தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மாநிலத்தில் பரப்பளவில் பெரிய மாவட்டமாக உள்ள திருவண்ணாமலையை பிரித்து செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று தமிழ் ம... மேலும் பார்க்க

அரசுத் திட்டங்களால் பெண்களின் கல்வித் தரம் மேம்பாடு! ஆட்சியா் க.தா்ப்பகராஜ்!

தமிழகத்தில் அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களால் பெண்களின் கல்வித் தரம் மேம்பாடு அடைந்துள்ளதுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு வட்டத்தில் 2 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

சேத்துப்பட்டு வட்டத்தில் உள்ள நம்பேடு, செம்மியமங்கலம் ஆகிய கிராமங்களில் வேளாண் துறை சாா்பில், ‘உழவரைத் தேடி வேளாண்மை’ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாம்களுக்கு வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி ... மேலும் பார்க்க