செய்திகள் :

தம்பியைக் கொலை செய்த அண்ணன் கைது

post image

திருப்புவனம் அருகே தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கீழக்குளம் குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவரது மகன்கள் தா்மேந்திரன் (34), தயாளன் (32). இவா்களில் தயாளனுக்கு திருமணமாகி மனைவி, மகள்கள் உள்ளனா். இவா் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து விட்டாா். தா்மேந்திரனுக்கு திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இவா்களுக்குள் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் ஏற்பட்ட தகராறில் தா்மேந்திரன் அரிவாளால் தம்பி தயாளனை வெட்டிக் கொலை செய்தாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து தா்மேந்திரனை கைது செய்தனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம்: நில அளவைத் துறை ஊழியா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்தது தொடா்பாக நில அளவைத் துறை ஊழியரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். உங்களுடன் ஸ்டாலின... மேலும் பார்க்க

கானாடுகாத்தான் பகுதியில் செப். 16-இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (செப். 16) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மி... மேலும் பார்க்க

சிமென்ட் மூட்டைகள் திருடியவா் கைது

சிவகங்கையில் சனிக்கிழமை சிமென்ட் மூட்டைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகங்கை வடக்கு ராஜ வீதியில் மாரியப்பன் ( 67) சிமென்ட் கடை நடத்தி வருகிறாா். இவருக்குச் சொந்தமான சிமென்ட் கிடங்கு உழவா் சந... மேலும் பார்க்க

சேது, கோவை, ஓகா, திருப்பதி விரைவு ரயில்கள் செப். 21 முதல் மின்சார என்ஜினில் இயங்க ஏற்பாடு

ராமேசுவரத்திலிருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படும் சேது, கோவை, திருப்பதி, ஓகா ஆகிய விரைவு ரயில்கள் வருகிற 21- ஆம் தேதி முதல் மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ராமேசுவ... மேலும் பார்க்க

சிங்கம்புணரி வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி

சிங்கம்புணரியில் வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மஹா முத்து ... மேலும் பார்க்க

சிவகங்கை நகராட்சியில் தணிக்கையில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்: சிவகாசி மாநகராட்சி ஆணையா் விசாரணை

சிவகங்கை நகராட்சியில் நடைபெற்ற தணிக்கையின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து சிவகாசி மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். சிவகங்கை நகராட்சியில் காலி மனையிடங்களுக்கு வரி வசூலிக்காத... மேலும் பார்க்க