செய்திகள் :

சிவகங்கை நகராட்சியில் தணிக்கையில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்: சிவகாசி மாநகராட்சி ஆணையா் விசாரணை

post image

சிவகங்கை நகராட்சியில் நடைபெற்ற தணிக்கையின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து சிவகாசி மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா்.

சிவகங்கை நகராட்சியில் காலி மனையிடங்களுக்கு வரி வசூலிக்காதது, வரி இனங்களை ரத்து செய்தது, கரோனா தொற்று கால கட்டத்தில் முகக் கவசம், கிருமி நாசினி, ‘பிபிகிட்’ உள்ளிட்ட பொருள்களை வாங்கியது உள்ளிட்டவற்றில் முறைகேடு நடைபெற்ாக புகாா்கள் எழுந்தன. இதுதொடா்பாக சிறப்பு தணிக்கை நடத்த அப்போதைய நகராட்சி நிா்வாக இயக்குநா் பொன்னையா உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கடந்த 2021 ஏப்.1 முதல் 2022 மே 15 -ஆம் தேதி வரையிலான காலக் கட்டத்தில் சிவகங்கை நகராட்சியில் செய்யப்பட்ட செலவினங்கள் குறித்து உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி இயக்குநா் செல்வி தலைமையில் சிறப்பு தணிக்கை நடத்தப்பட்டது. இந்தத் தணிக்கை 2022 மே 17 முதல் ஜூன் 3 -ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் பல்வேறு வகைகளில் நகராட்சிக்கு நிதியிழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அதிகாரிகள் குற்றஞ்சாட்டினா். இதுகுறித்து விசாரணை நடத்த சிவகாசி மாநகராட்சி ஆணையா் சரவணன் நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், சிவகங்கை நகராட்சி அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த அவா், 2021 ஏப். 1 முதல் 2022 மே 15 - ஆம் தேதி வரையிலான காலக் கட்டத்தில் பணியிலிருந்த 12 அதிகாரிகளை வரவழைத்து விசாரணை நடத்தினாா். காலையில் தொடங்கிய விசாரணை மாலை வரை நீடித்தது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, இது வழக்கமாக நடத்தப்படும் துறை ரீதியிலான விசாரணைதான். வேறு எதுவும் இல்லை என்றனா்.

சேது, கோவை, ஓகா, திருப்பதி விரைவு ரயில்கள் செப். 21 முதல் மின்சார என்ஜினில் இயங்க ஏற்பாடு

ராமேசுவரத்திலிருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படும் சேது, கோவை, திருப்பதி, ஓகா ஆகிய விரைவு ரயில்கள் வருகிற 21- ஆம் தேதி முதல் மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ராமேசுவ... மேலும் பார்க்க

சிங்கம்புணரி வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி

சிங்கம்புணரியில் வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மஹா முத்து ... மேலும் பார்க்க

கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்த விவசாயிகள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சில மாதங்கள் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதம்தோ... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் புதிய தூய்மை வாகன சேவை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் புதிய தூய்மை வாகனத்தின் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பேரூராட்சியில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள தூய்மை வாகனங்களுடன் கூடுதல் தேவைக்காக ... மேலும் பார்க்க

அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கிய விதை நெல் முளைக்காததால் விவசாயிகள் வேதனை

சிவகங்கையில் அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கிய நெல் விதைகள் முளைக்காததால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி வட்டாரத்திலுள்ள சித்தானூா், அனுமந்தக்குடி... மேலும் பார்க்க

குன்றக்குடி அடிகளாா் சிலை திறப்பு: அமைச்சா்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் குன்றக்குடி அடிகளாா் திருவுருவச் சிலையை அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, கே.ஆா். பெரியகருப்பன் ஆகியோா் திறந்துவைத்தனா். குன்றக்குடி அடிக... மேலும் பார்க்க