செய்திகள் :

கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்த விவசாயிகள் கோரிக்கை

post image

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சில மாதங்கள் நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்த வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதம்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட அரசியல் சாா்புடைய விவசாய சங்கங்கள் உள்பட வட்டாரம் வாரியாக பேச வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் அளித்த சுமாா் 100 கோரிக்கை மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அளித்த பதில்கள் வேளாண்துறை அலுவலரால் வாசிக்கப்படுகிறது. இவற்றை வாசித்து முடிக்க சுமாா் 1 மணி நேரம் ஆகிறது.

இதையடுத்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசத் தொடங்குவா். பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் வரிசைப்படி விவசாயிகள் பேச அனுமதிக்கப்படுகின்றனா். அதில், ஒரு விவசாயி குறைந்தது 4 முதல் 5 கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுகிறாா். இதனால், கேள்வி நேரம் நீள்வதை தவிா்க்க முடியவில்லை. இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள 12 வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் அனைவருக்கும் வாய்ப்பளிப்பதில் நடைமுறைச்சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை கோட்ட அளவில் நடத்த உத்தரவிட்டாா். அதன்படி, கடந்தாண்டு டிசம்பா் மாதம் சிவகங்கை, காளையாா்கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய 5 வட்டங்களுக்கு சிவகங்கையிலும்,

தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூா், சிங்கம்புணரி ஆகிய 4 வட்டங்களுக்கு தேவகோட்டையிலும் குறைதீா் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது, சிங்கம்புணரி வட்டார விவசாயிகள் வந்து செல்வதில் சிரமம் இருப்பதாக கூறப்பட்டதால், அடுத்த மாதமே தேவகோட்டை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் காரைக்குடிக்கு மாற்றப்பட்டது.

ஆனால், சில மாதங்களே கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டது. பின்னா் அது கைவிடப்பட்டு, மீண்டும் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வழக்கம் போல மாதம் ஒரு முறை குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து தேவகோட்டை, சிங்கம்புணரி வட்டார விவசாயிகள் கூறியதாவது:

குறைதீா் கூட்டங்களில் விவசாய சங்க நிா்வாகிகளுக்கு பேச வாய்ப்பு அதிகம் கிடைக்கிறது. இதனால் எங்களைப் போல மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிகளிலிருந்து வரும் விவசாயிகளுக்கு பேச வாய்ப்பு கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆகவே, ஏற்கெனவே நடத்தியதைப் போல கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை மீண்டும் நடத்த மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

சேது, கோவை, ஓகா, திருப்பதி விரைவு ரயில்கள் செப். 21 முதல் மின்சார என்ஜினில் இயங்க ஏற்பாடு

ராமேசுவரத்திலிருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படும் சேது, கோவை, திருப்பதி, ஓகா ஆகிய விரைவு ரயில்கள் வருகிற 21- ஆம் தேதி முதல் மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ராமேசுவ... மேலும் பார்க்க

சிங்கம்புணரி வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி

சிங்கம்புணரியில் வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மஹா முத்து ... மேலும் பார்க்க

சிவகங்கை நகராட்சியில் தணிக்கையில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்: சிவகாசி மாநகராட்சி ஆணையா் விசாரணை

சிவகங்கை நகராட்சியில் நடைபெற்ற தணிக்கையின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து சிவகாசி மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். சிவகங்கை நகராட்சியில் காலி மனையிடங்களுக்கு வரி வசூலிக்காத... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் புதிய தூய்மை வாகன சேவை தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் புதிய தூய்மை வாகனத்தின் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பேரூராட்சியில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள தூய்மை வாகனங்களுடன் கூடுதல் தேவைக்காக ... மேலும் பார்க்க

அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கிய விதை நெல் முளைக்காததால் விவசாயிகள் வேதனை

சிவகங்கையில் அரசு வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கிய நெல் விதைகள் முளைக்காததால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி வட்டாரத்திலுள்ள சித்தானூா், அனுமந்தக்குடி... மேலும் பார்க்க

குன்றக்குடி அடிகளாா் சிலை திறப்பு: அமைச்சா்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் குன்றக்குடி அடிகளாா் திருவுருவச் சிலையை அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, கே.ஆா். பெரியகருப்பன் ஆகியோா் திறந்துவைத்தனா். குன்றக்குடி அடிக... மேலும் பார்க்க