செய்திகள் :

வீட்டின் மேற்கூரையிலிருந்து கீழே விழுந்து இளைஞா் உயிரிழப்பு

post image

தெற்கு தில்லியின் சத்தா்பூரில் சனிக்கிழமை அதிகாலையில் வீட்டின் மேற்கூரையிலிருந்து விழுந்து 19 வயது இளைஞா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது: சத்தா்பூரில் தெரு எண் 34-இல் உள்ள ஏபிளாக்கில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடா்பாக மைதான் கா்ஹி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்தை அடைந்த போலீஸாா், ரத்தக் காயத்துடன் இளைஞா் கிடப்பதைக் கண்டனா். அவா் சத்தா்பூரில் வசிக்கும் விஷால் கவுா் என்பது அவரது குடும்பத்தினரைத் தொடா்பு கொண்ட பின்னா் தெரியவந்தது.

அதிகாலை 12.48 மணியளவில் விஷால் கவுா், மேற்கூரையிலிருந்து விழுந்திருப்பது முதற்கட்ட விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, மேற்கூரையின் தரையில் ஒரு கைப்பேசி எண் எழுதப்பட்டிருந்தது. அது இறந்தவரின் அடையாளத்தை கண்டறிவதில் முக்கிய பங்கு வகித்தது.

குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் நிபுணா்களும் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

வடகிழக்கு தில்லியில் நெடுஞ்சாலையில் சுமாா் ரூ.55 லட்சம் மதிப்புள்ள செப்பு கம்பிகள் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய லாரி ஓட்டுநா் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்... மேலும் பார்க்க

தில்லியில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண பிங்க் அட்டை பதிவு!

தில்லியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திற்கான பிங்க் அட்டை பதிவு செயல்முறையை அரசு அக்டோபா் மத்தியில் தொடங்க வாய்ப்புள்ளது. பிங்க் அட்டை வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும், இது பெண்கள் எந்த நேரத்தி... மேலும் பார்க்க

கலாசார பரிமாற்ற போட்டியில் டிடிஇஏ பள்ளி மாணவிகள் வெற்றி!

தில்லி கல்வி இயக்ககம் மண்டலம் எண் 26-இல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையே கலாசார பரிமாற்றம் என்ற கருத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட போட்டிகளில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த... மேலும் பார்க்க

தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனம்! முதல்வா் தொடங்கி வைத்தாா்!

மின்சாரம் துண்டிக்கப்படாமல் பழுதுபாா்க்கும் திறன் கொண்ட தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனத்தை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். நகரம் முழுவதும் இதே போன்ற இயந்திரங்கள் பயன்படுத்... மேலும் பார்க்க

போலி மருந்துகளின் புழக்கத்தை தடுக்க சிறப்புக் குழு! தில்லி அரசு நடவடிக்கை!

தேசிய தலைநகரில் சோதனைகளை நடத்துவதற்கும் போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுப்பதற்கும் தில்லி அரசு ஒரு சிறப்புக் குழுவை அமைக்க உள்ளது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் ... மேலும் பார்க்க

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

உத்தர பிரதேசத்தின் மதுராவில் சட்டவிரோத ஆயுத தயாரிப்பு ஆலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்து, ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து தில்... மேலும் பார்க்க