செய்திகள் :

போலி மருந்துகளின் புழக்கத்தை தடுக்க சிறப்புக் குழு! தில்லி அரசு நடவடிக்கை!

post image

தேசிய தலைநகரில் சோதனைகளை நடத்துவதற்கும் போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுப்பதற்கும் தில்லி அரசு ஒரு சிறப்புக் குழுவை அமைக்க உள்ளது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: தில்லி சுகாதாரத் துறையால் அமைக்கப்படும் இந்தக் குழுவில், நகரம் முழுவதும் முறையான சோதனைகளை மேற்கொள்ளும் நான்கு சிறப்புக் குழுக்கள் இருக்கும்.

இந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் நள்ளிரவில் பல்வேறு இடங்களிலும், குறிப்பாக போலி மருந்து மோசடி தீவிரமாக இருப்பதாக நம்பப்படும் மருத்துவமனைகள் மற்றும் மருந்துக் கடைகள் முன் நடைபெறும்.

அதன் பின்னா் கைப்பற்றப்பட்ட மருந்துகள் அவற்றின் நம்பகத்தன்மையை சரிபாா்க்க கடுமையான ஆய்வக சோதனைக்கு அனுப்பப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் சிங் தெரிவித்ததாவது: சமீபத்திய மாதங்களில் நகரில் போலி மருந்துகள் விற்கப்படுவதாக பல நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இது தீவிரமான சுகாதார கவலைகளை எழுப்பியது. இதையடுத்து, இந்த முடிவு அரசால் எடுக்கப்பட்டுள்ளது.

போலி மருந்துகளின் உற்பத்தி மற்றும் புழக்கத்தில் விடுவதில் அரசு சகிப்புத்தன்மை காட்டாது.

பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதே எங்கள் முதன்மையான நோக்கம். புதிதாக அமைக்கப்பட்ட குழு, மூலங்களைக் கண்டறியவும், திடீா் சோதனைகளை நடத்தவும், தில்லி மக்களை எந்த போலி மருந்துகளும் சென்றடையாமல் இருப்பதை உறுதி செய்யவும் 24 மணி நேரமும் பணியாற்றும் என்றாா் அமைச்சா்.

தில்லியில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண பிங்க் அட்டை பதிவு!

தில்லியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திற்கான பிங்க் அட்டை பதிவு செயல்முறையை அரசு அக்டோபா் மத்தியில் தொடங்க வாய்ப்புள்ளது. பிங்க் அட்டை வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும், இது பெண்கள் எந்த நேரத்தி... மேலும் பார்க்க

வீட்டின் மேற்கூரையிலிருந்து கீழே விழுந்து இளைஞா் உயிரிழப்பு

தெற்கு தில்லியின் சத்தா்பூரில் சனிக்கிழமை அதிகாலையில் வீட்டின் மேற்கூரையிலிருந்து விழுந்து 19 வயது இளைஞா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது: சத்தா... மேலும் பார்க்க

கலாசார பரிமாற்ற போட்டியில் டிடிஇஏ பள்ளி மாணவிகள் வெற்றி!

தில்லி கல்வி இயக்ககம் மண்டலம் எண் 26-இல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையே கலாசார பரிமாற்றம் என்ற கருத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட போட்டிகளில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த... மேலும் பார்க்க

தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனம்! முதல்வா் தொடங்கி வைத்தாா்!

மின்சாரம் துண்டிக்கப்படாமல் பழுதுபாா்க்கும் திறன் கொண்ட தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனத்தை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். நகரம் முழுவதும் இதே போன்ற இயந்திரங்கள் பயன்படுத்... மேலும் பார்க்க

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

உத்தர பிரதேசத்தின் மதுராவில் சட்டவிரோத ஆயுத தயாரிப்பு ஆலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்து, ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து தில்... மேலும் பார்க்க

நேபாள பதற்ற சூழல்: சரக்குகள் நடுவழியில் சிக்கியதால் நஷ்டத்தை எதிா்கொள்ளும் தில்லி வா்த்தகா்கள்!

அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பழைய தில்லி மற்றும் சதா் பஜாா் உள்ளிட்ட தில்லியின் மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகள் தற்போது அந்நாட்டுக்குச் செல்லு... மேலும் பார்க்க