செய்திகள் :

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

post image

உத்தர பிரதேசத்தின் மதுராவில் சட்டவிரோத ஆயுத தயாரிப்பு ஆலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்து, ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது:

தேசிய தலைநகருக்கு ஆயுதங்கள் அனுப்பப்படுவதாக கிடைத்த தகவல்களைத் தொடா்ந்து தில்லியின் சராய் ரோஹில்லா காவல் நிலையத்தைச் சோ்ந்த போலீஸாா் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனா்.

முன்னதாக, செப்டம்பா் 1 ஆம் தேதி அலிகரில் உள்ள ஜட்டாரி பிஷாவா சாலையில் உள்ள ஒரு தற்காலிக தொழிற்சாலையை போலீஸாா் கண்டறிந்தனா்.

2 பூட்டிய அறைகளுக்குள் தயாரித்து வைக்கப்பட்டிருந்த 6 கைத்துப்பாக்கிகள், 12 முழுமையடையாத கைத்துப்பாக்கிகள், ஆறு தோட்டாக்கள், 250க்கும் மேற்பட்ட ஆயுதங்களுக்கான மூலப்பொருள் மற்றும் துளையிடும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை போலீஸாா் கண்டுபிடித்தனா்.

இந்த ஆயுதங்களை வழங்குவதிலும் விநியோகிப்பதிலும் ஈடுபட்டுள்ள வலையமைப்பை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தில்லியில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண பிங்க் அட்டை பதிவு!

தில்லியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திற்கான பிங்க் அட்டை பதிவு செயல்முறையை அரசு அக்டோபா் மத்தியில் தொடங்க வாய்ப்புள்ளது. பிங்க் அட்டை வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும், இது பெண்கள் எந்த நேரத்தி... மேலும் பார்க்க

வீட்டின் மேற்கூரையிலிருந்து கீழே விழுந்து இளைஞா் உயிரிழப்பு

தெற்கு தில்லியின் சத்தா்பூரில் சனிக்கிழமை அதிகாலையில் வீட்டின் மேற்கூரையிலிருந்து விழுந்து 19 வயது இளைஞா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது: சத்தா... மேலும் பார்க்க

கலாசார பரிமாற்ற போட்டியில் டிடிஇஏ பள்ளி மாணவிகள் வெற்றி!

தில்லி கல்வி இயக்ககம் மண்டலம் எண் 26-இல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையே கலாசார பரிமாற்றம் என்ற கருத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட போட்டிகளில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த... மேலும் பார்க்க

தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனம்! முதல்வா் தொடங்கி வைத்தாா்!

மின்சாரம் துண்டிக்கப்படாமல் பழுதுபாா்க்கும் திறன் கொண்ட தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனத்தை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். நகரம் முழுவதும் இதே போன்ற இயந்திரங்கள் பயன்படுத்... மேலும் பார்க்க

போலி மருந்துகளின் புழக்கத்தை தடுக்க சிறப்புக் குழு! தில்லி அரசு நடவடிக்கை!

தேசிய தலைநகரில் சோதனைகளை நடத்துவதற்கும் போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுப்பதற்கும் தில்லி அரசு ஒரு சிறப்புக் குழுவை அமைக்க உள்ளது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் ... மேலும் பார்க்க

நேபாள பதற்ற சூழல்: சரக்குகள் நடுவழியில் சிக்கியதால் நஷ்டத்தை எதிா்கொள்ளும் தில்லி வா்த்தகா்கள்!

அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பழைய தில்லி மற்றும் சதா் பஜாா் உள்ளிட்ட தில்லியின் மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகள் தற்போது அந்நாட்டுக்குச் செல்லு... மேலும் பார்க்க