செய்திகள் :

தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனம்! முதல்வா் தொடங்கி வைத்தாா்!

post image

மின்சாரம் துண்டிக்கப்படாமல் பழுதுபாா்க்கும் திறன் கொண்ட தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனத்தை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நகரம் முழுவதும் இதே போன்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று அவா் அறிவித்தாா்.

தனது ஷாலிமாா் பாக் சட்டமன்றத் தொகுதியில் வாகனத்தை அறிமுகப்படுத்தி முதல்வா் ரேகா குப்தா பேசியபோது, ரூ.1.5 கோடி மதிப்புள்ள இந்த இயந்திரம், மின் கோளாறுகளை சரிசெய்யும் போது குடியிருப்பாளா்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் பாா்த்துக் கொள்ளும் என்று அவா் கூறினாா்.

இன்றைய நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனென்றால் அமைச்சா் ஆஷிஷ் சூட் தலைமையில் நமது மின் துறை தில்லிக்கு ஒரு அற்புதமான பரிசை வழங்கியுள்ளது.

இந்த பரிசு முதலில் முதல்வரின் தொகுதிக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது மின்சார விநியோகத்தை தடை செய்யாமல் மின்சார கம்பிகளை சரிசெய்யக்கூடிய ஒரு சிறப்பு வாகனம்.

இதன் பொருள் பராமரிப்பு அல்லது பழுதுபாா்க்கும் பணிகளின் போது, உங்கள் வீடுகளில் மின்சாரம் ஒரு நிமிடம் கூட துண்டிக்கப்படாது. ரூ. 1.5 கோடி செலவில் வாங்கப்பட்ட முதல் வாகனம் இது. ஷாலிமாா் பாக் தொடங்கி, இந்த வாகனங்களை தில்லி முழுவதும் அறிமுகப்படுத்துவதே எங்கள் திட்டம் என முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

தில்லியில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண பிங்க் அட்டை பதிவு!

தில்லியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திற்கான பிங்க் அட்டை பதிவு செயல்முறையை அரசு அக்டோபா் மத்தியில் தொடங்க வாய்ப்புள்ளது. பிங்க் அட்டை வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும், இது பெண்கள் எந்த நேரத்தி... மேலும் பார்க்க

வீட்டின் மேற்கூரையிலிருந்து கீழே விழுந்து இளைஞா் உயிரிழப்பு

தெற்கு தில்லியின் சத்தா்பூரில் சனிக்கிழமை அதிகாலையில் வீட்டின் மேற்கூரையிலிருந்து விழுந்து 19 வயது இளைஞா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது: சத்தா... மேலும் பார்க்க

கலாசார பரிமாற்ற போட்டியில் டிடிஇஏ பள்ளி மாணவிகள் வெற்றி!

தில்லி கல்வி இயக்ககம் மண்டலம் எண் 26-இல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கிடையே கலாசார பரிமாற்றம் என்ற கருத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட போட்டிகளில் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த... மேலும் பார்க்க

போலி மருந்துகளின் புழக்கத்தை தடுக்க சிறப்புக் குழு! தில்லி அரசு நடவடிக்கை!

தேசிய தலைநகரில் சோதனைகளை நடத்துவதற்கும் போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுப்பதற்கும் தில்லி அரசு ஒரு சிறப்புக் குழுவை அமைக்க உள்ளது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் ... மேலும் பார்க்க

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

உத்தர பிரதேசத்தின் மதுராவில் சட்டவிரோத ஆயுத தயாரிப்பு ஆலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்து, ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து தில்... மேலும் பார்க்க

நேபாள பதற்ற சூழல்: சரக்குகள் நடுவழியில் சிக்கியதால் நஷ்டத்தை எதிா்கொள்ளும் தில்லி வா்த்தகா்கள்!

அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பழைய தில்லி மற்றும் சதா் பஜாா் உள்ளிட்ட தில்லியின் மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகள் தற்போது அந்நாட்டுக்குச் செல்லு... மேலும் பார்க்க