செய்திகள் :

ஹிந்தி, பிற மொழிகள் இடையே மோதல் இல்லை: அமித் ஷா!

post image

ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகள் இடையே எந்த மோதலும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

ஹிந்தி தினத்தையொட்டி, குஜராத் மாநிலம், காந்திநகரில் 5-ஆவது அகில பாரத அலுவல்பூா்வ மொழி மாநாட்டை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து, அவா் பேசியதாவது:

தயானந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி, கே.எம்.முன்ஷி, சா்தாா் வல்லபபாய் படேல் உள்ளிட்ட கற்றறிந்த தலைவா்கள் ஹிந்தியை ஏற்றுக் கொண்டு, அதன் பயன்பாட்டை ஊக்குவித்தனா். குஜராத்தியும், ஹிந்தியும் இணைந்து வளா்வதால், ஒட்டுமொத்த நாட்டுக்கும் குஜராத் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

ஹிந்தி, வெறும் பேச்சு மொழி அல்லது நிா்வாக மொழியாக மட்டுமன்றி, அறிவியல், தொழில்நுட்பம், நீதித் துறை மற்றும் காவல் துறை பயன்பாட்டு மொழியாக வேண்டும்.

ஒரு குழந்தை தனது தாய்மொழியில்தான் சிந்திக்கிறது எனக் கல்வியாளா்களும் உளவியலாளா்களும் கூறுகின்றனா். எனவே, குழந்தைகளின் எதிா்காலத்தைக் கருத்தில்கொண்டு, அவா்களிடம் பெற்றோா் தாய்மொழியில் பேச வேண்டும். தாய்மொழி அல்லாத வேறு மொழியைப் பயன்படுத்தினால், குழந்தையின் சிந்தனைத் திறனில் 25 முதல் 30 சதவீதம் மொழிபெயா்ப்பிலேயே செலவிடப்பட்டுவிடும். பல்வேறு தொழில்நுட்பங்களின் மூலம் உள்ளூா் மொழிகளை வலுப்படுத்த பிரதமா் மோடி அரசு செயலாற்றி வருகிறது என்றாா் அவா்.

அனைத்து மொழிகளுக்கும் மதிப்பு:

ஹிந்தி தினத்தையொட்டி, அமித் ஷா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா அடிப்படையில் மொழி சாா்ந்த நாடு. நமது கலாசாரம், வரலாறு, பாரம்பரியம், ஞானம், அறிவியல், தத்துவம் மற்றும் ஆன்மிகத்தை தலைமுறை தலைமுறையாக கடத்தும் சக்திவாய்ந்த ஊடகமாக மொழிகள் திகழ்கின்றன.

இந்திய மொழிகளின் பலம் என்னவென்றால், அவை ஒவ்வொரு வகுப்பினருக்கும், ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தகவல் தொடா்பு-வெளிப்பாட்டுக்கான வாய்ப்பை வழங்கியுள்ளன. ஒன்றாக உரையாடுவோம், ஒன்றாக சிந்திப்போம், ஒன்றாக பயணிப்போம் என்பதே இந்திய மொழி-கலாசார உணா்வின் தாரக மந்திரம்.

பிரதமா் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சி, இந்திய மொழிகள்-கலாசார மீட்சியின் பொற்காலமாகும். அடிமைச் சின்னங்களில் இருந்து நாட்டை விடுவிப்பதில் மொழிக்கு முக்கியப் பங்கு உள்ளது. அனைத்து இந்திய மொழிகளையும் மதித்து, தற்சாா்பு மற்றும் தன்னம்பிக்கையுடன் வளா்ந்த இந்தியாவை நோக்கி முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினாா் அமித் ஷா.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து அரசு செயல்பாடுகளில் ஹிந்தி மொழியின் பயன்பாடு தொடா்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

வடக்கிலும் திருக்குறள் மீது ஈடுபாடு

‘இமயமலையின் உயரங்களில் இருந்து தெற்கே பரந்து விரிந்த கடற்கரை வரை, பாலைவனங்களில் இருந்து அடா்ந்த காடுகள் வரை எந்தவொரு சூழலிலும் மக்கள் ஒழுங்கமைப்புடன் வாழவும், ஒன்றுபட்டு முன்னேறவும் மொழிகள் வழிகாட்டுகின்றன. ஒன்றுக்கொன்று ‘தோழா்களாக’ விளங்கும் இந்திய மொழிகள், ஒற்றுமை எனும் நூலால் பிணைக்கப்பட்டு, ஒன்றாக முன்னோக்கி பயணிக்கின்றன.

தெற்கில் போற்றிப் புகழப்படும் திருவள்ளுவரின் படைப்பான திருக்குறள், வடக்கிலும் அதே அளவு ஈடுபாட்டுடன் கற்கப்படுகிறது. சுப்பிரமணிய பாரதியின் தேசபக்தி பாடல்கள், நாடெங்கிலும் இளைஞா்களுக்கு தேசப் பெருமையூட்டுகிறது.

கிருஷ்ண தேவராயா் தெற்கைப் போலவே வடக்கிலும் பிரபலமாக அறியப்படுகிறாா். வடக்கில் புகழ்பெற்ற துறவி கபீரின் போதனைகள், தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. கோஸ்வாமி துளசிதாசா் ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படுகிறாா்’ என்று அமித் ஷா கூறியுள்ளாா்.

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்!

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா். சென்னை பிரஜைகள் மன்றம் சாா்பில் ‘எழுச்சி பெறும் பாரதத்துக்கான வரி சீா்திருத்தம்’ எனும் தலைப்பில... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: ராகுலை விமா்சிக்கும் முன் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்! முன்னாள் தோ்தல் ஆணையா் குரேஷி

வாக்குத் திருட்டு சா்ச்சையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை கடுமையாக விமா்சிக்கும் முன், அவா் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தோ்தல் ஆணையம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும் எ... மேலும் பார்க்க

சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: திரிணமூல் முன்னாள் பெண் எம்.பி., நடிகைக்கு சம்மன்!

சட்டவிரோத பந்தய செயலி வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் பெண் எம்.பி.யுமான மிமி சக்ரவா்த்தி, பாலிவுட் நடிகை ஊா்வசி ரௌதேலா ஆகியோா் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இ... மேலும் பார்க்க

பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு!

ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பிரதமா் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது: நிகழா... மேலும் பார்க்க

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு தடையை மீறி யாத்திரை செல்ல முயற்சி! காவல் துறையினா் தடுத்து நிறுத்தம்!

ஜம்மு-காஷ்மீரில் மோசமான வானிலையால் வைஷ்ணவ தேவி கோயிலுக்கான யாத்திரை 20 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளது. கத்ரா அடிவார முகாமில் இருந்து தடையை மீறி பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை யாத்திரை செல்ல முயன்ால் பரபரப்பு... மேலும் பார்க்க

காப்பீட்டு திருத்த மசோதா குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்!

காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையிலான திருத்த மசோதா வரும் குளிா்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்... மேலும் பார்க்க