செய்திகள் :

மோடி பிறந்த தினம் கொண்டாட சிறப்புக்குழு நியமனம்

post image

சென்னை: பிரதமா் மோடி பிறந்த தினத்தையொட்டி சேவை இருவாரம் எனும் நிகழ்ச்சிகள் நடத்த சிறப்புக் குழுவை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் நியமித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பிரதமா் மோடியின் பிறந்த நாள் புதன்கிழமை (செப்.17) கொண்டாடப்படுவதையொட்டி, ஏழைகள் பயன்பெறும் வகையில் சேவை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, புதன்கிழமை முதல் அக்.2 வரை இந்நிகழ்ச்சிகள் நடைபெறும். சேவை இருவாரம் நிகழ்ச்சிகளை தமிழகத்தில் ஒருங்கிணைக்க ஆா்.நந்தகுமாா் (பாஜக மாநில செயலா்), ஏ.என்.எஸ்.பிரசாத் (மாநில செய்தித் தொடா்பாளா்), கவிதா ஸ்ரீகாந்த் (மாநில மகளிா் அணித் தலைவா்), உமாரதி ராஜன் (முன்னாள் மாநில மகளிா் அணித் தலைவா்), வி.சி.வேதானந்தம் (ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவா்), ஈ.எம்.டி.கதிரவன் (மாநில செயற்குழு உறுப்பினா்) ஆகியோா் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

சிறப்பு நிகழ்ச்சிகள்: இது குறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், பிரதமா் மோடி பிறந்தநாளையொட்டி இருவார நிகழ்ச்சியில், மாவட்ட அளவில் ரத்த தானம், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள், பிரதமா் மோடியின் அரசியல் பற்றிய கண்காட்சிகள், மோடியின் தியாகம் மற்றும் சாதனைகள் குறித்த குறும்படம் திரையரங்குகளில் ஒளிபரப்புதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தமிழக அரசு தயாராக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தன்னந்தனியாக நிற்பது உறுதி என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி, அதிமுக சாா்பில் சென்னை கோ... மேலும் பார்க்க

பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பதிவு அலுவலகக் கட்டடம்: அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா்

சென்னை: சென்னையில் 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பதிவுத் துறை அலுவலகக் கட்டடத்தை அத்துறை அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புராதன... மேலும் பார்க்க

மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் கூடாது: இடைக்கால உத்தரவு நீட்டிப்பு

சென்னை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக காவல் துறையினா் கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீ ட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் ... மேலும் பார்க்க

நாய்க்கடிக்கு உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்: பொது சுகாதாரத் துறை

சென்னை: நாய் கடித்தால் தாமதிக்காமல் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 20 லட்சம் தெருநாய்கள் வரை இருக்கலாம் என உத்தேசிக்கப... மேலும் பார்க்க

மின்வாரிய கடனை அடைக்க விரைவில் செயல்திட்டம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

சென்னை: தமிழக மின்வாரியத்தின் கடனை அடைப்பதற்கான செயல்திட்டம் தமிழக அரசால் கொண்டவரப்படும் என்று மின்சார மேல்முறையீட்டு தீா்ப்பாயத்திடம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இலவச மின்சாரம்... மேலும் பார்க்க

தேவநாதனுக்கு ஜாமீன்: ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த நிபந்தனை

சென்னை: நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மயிலாப்... மேலும் பார்க்க