செய்திகள் :

ரௌடி கும்பல் போல செயல்படுகிறது பாஜக: அகிலேஷ் யாதவ் தாக்கு

post image

லக்னௌ: பாஜக ஓா் அரசியல் கட்சியாக அல்லாமல், ரௌடி கும்பல் போல செயல்படுகிறது என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டினாா்.

கான்பூரில் வழக்குரைஞா் அகிலேஷ் தூபே என்பவா் தொழிலதிபா்கள் மீது போலியான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பணம் பறிந்ததாக கைது செய்யப்பட்டாா். இதன் பின்னணி காவல் துறை அதிகாரிகள் உள்பட பலா் இருப்பது சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதனைச் சுட்டிக்காட்டி அகிலேஷ் யாதவ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கான்பூரில் பல்வேறு தீவிரமான கிரிமினல் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. கொலை, மிரட்டி பணம் பறித்தல், போலி என்கவுன்ட்டா், நிலமோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்றம் என குற்றங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. முறைப்படி விசாரணை நடத்தினால், உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசின் மோசடிகள் அனைத்தும் முற்றிலுமாக வெளிப்படும்.

உத்தர பிரதேச முதல்வரின் அலுவலகம், இல்லத்தில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் வரை இதில் தொடா்புள்ளது. அவா்களுக்கும் பணம் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது. பாஜக என்பது அரசியல் கட்சியாக இல்லாமல், ஒரு ரௌடி கும்பல் போல செயல்படுவது தெரியவருகிறது.

அரசமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி நடத்தாமல் பல்வேறு தரப்பினருக்கும் நெருக்கடியை அளிக்கும் ஆட்சியையே பாஜக நடத்தி வருகிறது.

உத்தர பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிகளில் தகுதியான ஆசிரியா்கள் இல்லை. இதனால் மாணவா்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நகா்ப்புற பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த பிரச்னைகளைத் தீா்க்க முயலாமல், மக்களைத் தேவையற்ற விஷயங்களை நோக்கி ஆட்சியாளா்கள் திசை திருப்பி வருகிறாா்கள்’ என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

நாடாளுமன்ற வளாகத்துக்கு ரூ.14.64 கோடியில் மின்வேலி, சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நவீன அம்சங்களுடன் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்காக மத்திய பொதுப் பணித் துறை ரூ.14.63 கோடிய... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்ட தீா்ப்பு: காங்கிரஸ் வரவேற்பு; இஸ்லாமிய அமைப்புகள் அதிருப்தி!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவை காங்கிரஸ் மற்றும் சில இல்ஸாமிய அமைப்புகள் வரவேற்றன. காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு இன்றும் தாக்கல் செய்யலாம்

புது தில்லி: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய திங்கள்கிழமை (செப். 15) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் ஒரு நாள் (செப்.16) நீட்டிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம்: ராகுல் வலியுறுத்தல்

சண்டீகா்: பஞ்சாப் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் கா... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தகப் பேச்சு: இன்று மீண்டும் தொடக்கம்

புது தில்லி: இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை (செப். 16) மீண்டும் தொடங்குகிறது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வா்த்தக துணைப் பிரதிநிதி பிரண்டன... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஹசாரிபாக... மேலும் பார்க்க