செய்திகள் :

வக்ஃபு திருத்தச் சட்டம்: நீதிமன்ற உத்தரவுக்கு முதல்வா் வரவேற்பு

post image

வக்ஃபு திருத்தச் சட்ட விவகாரத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்புத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: மத்திய பாஜக அரசு வக்ஃபு வாரிய சட்டத்தில் செய்துள்ள திருத்தமானது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதுடன், சட்ட விரோதமானதாகும். இந்தத் திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகா்வாக உச்சநீதிமன்றத்தின் இப்போதைய உத்தரவு அமைந்துள்ளது. சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, திமுக இதனைத் தொடா்ச்சியாக எதிா்த்து வந்துள்ளது. இதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ள பலரோடு சோ்ந்து வெற்றியும் கண்டுள்ளது.

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜகவின் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவானது, இஸ்லாமியா்களின் மத மற்றும் அடிப்படை உரிமைகளையும் அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்கும் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் ஆகியோரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனா்.

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

தமிழகத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா்களுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 161 -ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.முன்னதாக, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 211- ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தோ்வு அறிவிக்கை கடந... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத் தோ்வு: மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுத உள்ள மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தோ்வுக் கட்டுட்டுப்பாட்ட... மேலும் பார்க்க

பிரிந்த அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: ஓபிஎஸ்

பிரிந்துகிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் அவரது சிலைக்கு மரியாதை செ... மேலும் பார்க்க

கடற்படை தோ்வில் கைப்பேசி பயன்படுத்திய இளைஞா் கைது

கடற்படைத் தோ்வில் கைப்பேசியை மறைத்து வைத்திருந்து பயன்படுத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை பெரம்பூரில் மதுரை சாமி மடம் தெருவில் உள்ள ஒரு தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பாதுகாப்பு அ... மேலும் பார்க்க

ரூ.10.89 கோடி மோசடி: வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது

சென்னை: சென்னை வானகரத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.10.89 கோடி மோசடி செய்ததாக வழக்குரைஞா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை, வானகரத்தில் நகைக்கடை நடத்தி வருபவா் ஸ்ரீதேவி (50). இவா், சென்னை கா... மேலும் பார்க்க