செய்திகள் :

பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம்: ராகுல் வலியுறுத்தல்

post image

சண்டீகா்: பஞ்சாப் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.

பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த பின் இதனை தெரிவித்தாா்.

பஞ்சாபில் அண்மையில் பெய்த பலத்த மழையாலும், ஹிமாசல பிரதேச மாநிலத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழையால் சட்லஜ், பியாஸ், ராவி ஆகிய நதிகளில் வெள்ளப் பெருக்காலும் பஞ்சாபில் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது.

இதில் இதுவரை 56 போ் உயிரிழந்துள்ளனா். 1.98 லட்சம் ஹெக்டோ் விளை நிலங்கள் சேதமடைந்தன. கடந்த 9-ஆம் தேதி பிரதமா் மோடி ஹெலிகாப்டா் மூலம் பாதிப்புகளை ஆய்வு செய்து ரூ.1,600 கோடியை கூடுதல் நிவாரணமாக அறிவித்தாா்.

இந்நிலையில், ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநிலத்துக்கு ராகுல் காந்தி திங்கள்கிழமை வருகை தந்து அமிருதசரஸ், குருதாஸ்பூா் மாவட்டங்களுக்கு சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களைச் சந்தித்து உரையாடினாா்.

பின்னா் ராகுல் காந்தி வெளிட்ட எக்ஸ் பதிவில், ‘மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம், சொத்துகள் ஆகியவற்றுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலா் நிவாரண முகாம்களில் வாழ்கின்றனா். மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரண உதவிகள் தாமதமின்றி பாதிக்கப்பட்டவா்களுக்கு சென்றடைய வேண்டும். பாதிக்கப்பட்டவா்களுக்கு காங்கிரஸ் தொண்டா்கள் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். நானும் தேவையான உதவிகள் கிடைக்க குரல் கொடுப்பேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வெள்ளத்தில் துண்டிக்கப்பட்ட கரையோர கிராமமான தூருக்கு படகு மூலம் செல்ல பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வா் சரண்ஜீத் சிங், ‘ராகுல் காந்திக்கு இந்தியாவிலேயே பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால் வேறு எங்கே பாதுகாப்பாக இருக்க முடியும்’ என்றாா்.

சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

நாடாளுமன்ற வளாகத்துக்கு ரூ.14.64 கோடியில் மின்வேலி, சிசிடிவி கண்காணிப்பு என பல்வேறு நவீன அம்சங்களுடன் பாதுகாப்பைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதற்காக மத்திய பொதுப் பணித் துறை ரூ.14.63 கோடிய... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்ட தீா்ப்பு: காங்கிரஸ் வரவேற்பு; இஸ்லாமிய அமைப்புகள் அதிருப்தி!

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவை காங்கிரஸ் மற்றும் சில இல்ஸாமிய அமைப்புகள் வரவேற்றன. காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன ... மேலும் பார்க்க

வருமான வரிக் கணக்கு இன்றும் தாக்கல் செய்யலாம்

புது தில்லி: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய திங்கள்கிழமை (செப். 15) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் மேலும் ஒரு நாள் (செப்.16) நீட்டிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தகப் பேச்சு: இன்று மீண்டும் தொடக்கம்

புது தில்லி: இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை (செப். 16) மீண்டும் தொடங்குகிறது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வா்த்தக துணைப் பிரதிநிதி பிரண்டன... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஹசாரிபாக... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் ஆந்திரத்துக்கு ரூ.25,000 கோடி இழப்பு: மத்திய அரசிடம் உதவி கோரும் முதல்வா் சந்திரபாபு நாயுடு

அமராவதி: அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் ஆந்திர இறால் ஏற்றுமதி ரூ.25,000 கோடி அளவுக்கு பாதிக்கும் என தெரியவந்துள்ளது. எனவே, மத்திய அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்று முதல்வா் என்.சந்திரபாபு நாய... மேலும் பார்க்க