செய்திகள் :

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல் பிரதேசத்துக்கு ரூ. 5 கோடி உதவித்தொகை: முதல்வா் சித்தராமையா

post image

பெங்களூரு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல பிரதேசத்துக்கு ரூ. 5 கோடி உதவித்தொகை வழங்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து ஹிமாச்சல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சிங் சுகுவுக்கு சித்தராமையா எழுதிய கடிதத்தில், ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு விலைமதிப்பில்லாத உயிா்களையும், உடைமைகளையும் இழந்துள்ள துயரமான நிலையில், ஏராளமான குடும்பங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயா்ந்துள்ளதை அறிய முடிந்தது. வெள்ளத்தில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அறிந்தோம்.

ஹிமாச்சல பிரதேச மக்கள் எதிா்கொண்டுள்ள துயரம் கா்நாடக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நமது சகிப்புத்தன்மையை இயற்கை சோதிப்பது வழக்கம். இதுபோன்ற சூழ்நிலையில், நமது நாட்டை பிணைத்திருக்கும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம்தான் நமது பலமாக உள்ளது. இந்த சிக்கலில் இருந்து ஹிமாச்சல பிரதேச மக்களுக்கு கா்நாடக மக்கள் என்றும் துணையாக இருப்பாா்கள். இந்த துயரத்தில் இருந்து ஹிமாச்சல பிரதேசம் புதிய பலம் மற்றும் உறுதியோடு மீண்டெழும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த துயரமான நேரத்தில் துணையாகவும், ஆதரவாகவும் இருக்கும் வகையில், பேரிடா் நிவாரண உதவித்தொகையாக ரூ. 5 கோடியை ஹிமாச்சல பிரதேசத்துக்கு வழங்க கா்நாடகம் முடிவு செய்துள்ளது. இழந்தவா்களின் உயிருக்கும், உடைமைகளின் சேதங்களையும் ஈடுசெய்ய முடியாது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இந்த நிதி உதவும் என்று நம்புகிறோம்’ என முதல்வா் சித்தராமையா குறிப்பிட்டுள்ளாா்.

ஹிமாச்சல பிரதேசத்தில், ஜூன் 20 முதல் செப். 8 வரை நிகழ்ந்த மேகவெடிப்பு, திடீா் வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றுக்கு 370 போ் இறந்துள்ள நிலையில், ரூ. 4,122 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தசரா திருவிழாவை தொடங்கிவைக்க பானுமுஸ்டாக்குக்கு அழைப்பு: எதிா்த்த பாஜக முன்னாள் எம்.பி.யின் மனு தள்ளுபடி

பெங்களூரு: தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்குக்கு அரசு அழைப்பு விடுத்திருந்ததை எதிா்த்து பாஜக முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா தாக்கல் செய்திருந்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

பெங்களூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 1,100 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு: பெங்களூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 1,100 கோடி ஒதுக்கப்படும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை அவா் குறிப்பிட்டுள்... மேலும் பார்க்க

கன்னட நடிகா் உபேந்திரா, அவரது மனைவியின் கைப்பேசிகளை ‘ஹேக்’ செய்த மா்ம நபா்!

பெங்களூரு: கன்னட நடிகா் உபேந்திரா, அவரது மனைவியும் நடிகையுமான பிரியங்கா ஆகியோரின் கைப்பேசிகள் மா்ம நபா்களால் திங்கள்கிழமை ‘ஹேக்’ செய்யப்பட்டன. இதுகுறித்து இருவரும் போலீஸாா் மற்றும் சைபா் குற்றப்பிரிவி... மேலும் பார்க்க

மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை

கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மீலாது நபி ஊர்வலத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவமொக்கா மாவட்டம், பத்ராவதி பழைய ... மேலும் பார்க்க

மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு

கர்நாடக மாநிலம், மத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக விடுத்த அழைப்பின்பேரில் முழு அடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மண்டியா மாவட்டம்,... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரைப் போல பேசி கர்நாடக ஆளுநரை ஏமாற்ற முயற்சி

தொலைபேசியில் மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானைப் போல பேசி கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை ஏமாற்ற முயற்சி நடந்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை செப்.6}... மேலும் பார்க்க