செய்திகள் :

மத்திய அமைச்சரைப் போல பேசி கர்நாடக ஆளுநரை ஏமாற்ற முயற்சி

post image

தொலைபேசியில் மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானைப் போல பேசி கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை ஏமாற்ற முயற்சி நடந்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை செப்.6}ஆம் தேதி தொலைபேசியில் அழைத்த மோசடி நபர், தன்னை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்று அறிமுகம் செய்துகொண்டு, சில உதவிகளைக் கேட்டுள்ளார்.

அதன் பிறகு, அந்த உதவி தொடர்பாக மீண்டும் தொலைபேசி அழைப்பு எதுவும் வராததால், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தொலைபேசியில் அழைத்து, ஏற்கெனவே செய்த தொலைபேசி அழைப்பு பற்றிக் கேட்டுள்ளார். ஆனால், ஆளுநரை முன்னதாக தொலைபேசியில் அழைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.

இதை தொடர்ந்து, பெங்களூரு காவல் துணை ஆணையரை அழைத்து, இது குறித்து விசாரிக்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டார்.

இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயரில் மோசடியான தொலைபேசி அழைப்பு கொல்கத்தாவிலிருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த மோசடி நபரை போலீஸார் தேடி வருவதாக கர்நாடக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை

கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மீலாது நபி ஊர்வலத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவமொக்கா மாவட்டம், பத்ராவதி பழைய ... மேலும் பார்க்க

மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு

கர்நாடக மாநிலம், மத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக விடுத்த அழைப்பின்பேரில் முழு அடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மண்டியா மாவட்டம்,... மேலும் பார்க்க

மல்லிகாா்ஜுன காா்கே விவசாயிகளை அவமதித்துவிட்டாா்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விவசாயிகளை அவமதித்துவிட்டாா் என்று மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல... மேலும் பார்க்க

பாலியல் பலாத்கார வழக்கு: சிறையில் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணி

பெங்களூரு: பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.525 வழங்க... மேலும் பார்க்க

விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது கல்வீச்சு, பதற்றம்: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

மத்தூா்: மண்டியா மாவட்டம், மத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது மசூதியில் இருந்து கல்வீசப்பட்டதால், கலவரச்சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து திங்கள்கிழமை பாஜகவி... மேலும் பார்க்க

பாஜக முன்னாள் அமைச்சா் மீது மானநஷ்ட வழக்கு தொடா்ந்தாா் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்

தா்மஸ்தலா விவகாரத்தின் பின்னணியில் தான் இருப்பதாக தெரிவித்திருந்த பாஜக முன்னாள் அமைச்சா் ஜனாா்தன ரெட்டிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மானநஷ்ட வழக்கு தொடா்ந்துள்ளாா். தா்மஸ்தலா கோயிலு... மேலும் பார்க்க