செய்திகள் :

காத்மாண்டு விமான நிலையம் மறுஅறிவிப்பின்றி மூடல்!

post image

நேபாளத்தில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரத்தை தொடர்ந்து, உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், அதிபர், பிரதமர் உள்ளிட்டோரின் வீடுகள் என அனைத்தும் தீக்கிரையாகின.

இளைஞர்களின் கலவரத்தை தொடர்ந்து, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி, அமைச்சர்கள் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் காத்மாண்டு விமான நிலையத்துக்குள் நுழைய முற்பட்டதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

காத்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்த இந்திய விமானங்கள் உள்பட அனைத்து விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டன. தொடர்ந்து விமான நிலையத்தை புதன்கிழமை மாலை 6 மணிவரை மூடுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், நேபாளத்தில் நிலைமை முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், பயணிகளும் பாதுகாப்பு கருதி மறுஅறிவிப்பு வரும்வரை விமான நிலையத்தை மூடுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து காத்மாண்டுவுக்கு இயக்கப்படும் விமானங்களை ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரத்து செய்தது.

இந்த நிலையில், நேபாளத்துக்கு சுற்றுலா மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்கள் தங்களின் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க விடுதி உரிமையாளர்களுக்கு நேபாள ராணுவம் கோரிக்கை வைத்துள்ளது.

மேலும், வெளிநாட்டுப் பயணிகளுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் அருகிலுள்ள பாதுகாப்புப் படையினரை அணுகவும் அல்லது 9851031495 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் நேபாள ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

Kathmandu airport closed without further notice

இதையும் படிக்க : நேபாள அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை: ராணுவம்

இஸ்ரேல் தாக்குதல்: கத்தார் விரைந்தார் அமீரக அதிபர்!

கத்தார் நாட்டின் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அந்நாட்டுக்கு நட்பு ரீதியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். கத்தார் தலைநகர் தோஹாவில், நேற்று (... மேலும் பார்க்க

நேபாளத்தில் 13,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெவ்வேறு சிறைச்சாலைகளிலிருந்து 13,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்... மேலும் பார்க்க

நேபாள பயணத்தை கூடுதல் கட்டணமின்றி மாற்றியமைத்துக்கொள்ளலாம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

நேபாளத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது பயணிகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. செப். 17 வரை நேபாளத்தில் இருந்து இந்தியா வருவதற்கோ அல்லது இந்தியாவில் இருந்து நேபாளம்... மேலும் பார்க்க

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

போராட்டத்தால் சிதைந்து போன நேபாளத்தில் இடைக்கால அரசை வழிநடத்த புதியதொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அண... மேலும் பார்க்க

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு 79-இல் நீதி கிடைத்தது..!

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது 79-ஆவது வயதில் நீதி கிடைத்ததை பெண் சமூகம் கொண்டாடி வருகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பதிவானதொரு பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்மண... மேலும் பார்க்க

கத்தாரில் தாக்குதல்! அரபு நாடுகளையும் குறிவைக்கிறதா இஸ்ரேல்?

காஸாவில் நீடிக்கும் சண்டையைத் தொடர்ந்து, கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை(செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.கத்தார் தலைநகர் தோஹாவில்... மேலும் பார்க்க