செய்திகள் :

கத்தாரில் தாக்குதல்! அரபு நாடுகளையும் குறிவைக்கிறதா இஸ்ரேல்?

post image

காஸாவில் நீடிக்கும் சண்டையைத் தொடர்ந்து, கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை(செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

கத்தார் தலைநகர் தோஹாவில் செப். 9 வான் வழியாக தீவிர தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. தோஹாவில் ஹமாஸ் படையின் அரசியல் பிரிவு தலைமை நிர்வாகிகள் வசிக்கும் குடியிருப்பு கட்டடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான் வழியாக திடீரென தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் படைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக எதிர்வினையாற்றிய கத்தார் அரசு இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை(செப். 9) நள்ளிரவில் அமெரிக்கா தரப்பிலிருந்து அளிக்கப்பட்டதொரு விளக்கத்தில், அமெரிக்காவுக்கு முன்கூட்டியே இத்தாக்குதல் பற்றி இஸ்ரேல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுவிட்டதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கரோலின் லியாவிட் தெரிவித்து சர்வதேச சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்த தவறவில்லை.

இந்த நிலையில், அடுத்தகட்டமாக அரபு நாடுகளுக்கு எதிராகவும் இஸ்ரேல் திரும்புகிறதா? என்பதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவைக்கான இஸ்ரேலின் தூதர் பேசுகையில், கத்தாரில் ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையானது சரியான முடிவே என்று வாதிட்டுள்ளார்.

அவர் பேசுகையில், “இந்தத் தாக்குதலானது கத்தார் மீதான தாக்குதல் அல்ல. ஹமாஸ் மீதான தாக்குதலே. நாங்கள்(இஸ்ரேல்) கத்தாருக்கு எதிரானவர்கள் அல்ல, அதுபோல, எந்தவொரு அரபு தேசத்துக்கும் எதிரானவர்கள் அல்ல, நாங்கள் தற்போதையை சூழலில் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு(ஹமாஸ் படை) எதிராகவே செயல்படுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Israel's UN envoy has defended targeting Hamas leaders in Qatar as the "right" decision, after the strikes on the US ally's soil drew a rare rebuke from President Donald Trump.

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு 79-இல் நீதி கிடைத்தது..!

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது 79-ஆவது வயதில் நீதி கிடைத்ததை பெண் சமூகம் கொண்டாடி வருகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பதிவானதொரு பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்மண... மேலும் பார்க்க

நேபாள ஆணிவேர் சிங்கா மாளிகை தீக்கிரை! ஜென் ஸி கோபத்தின் விலை! தொடர்ந்து வந்த துயரம்!!

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்திருந்த சிங்கா அரண்மனை எனப்படும் அரசு மாளிகை, ஜென் ஸி இளைஞர்களின் கலவரத்தில், தீக்கிரையானது.ஆசியாவின் மிகப்பெரிய அரண்மனையை காவுவாங்கிவிட்டு, அதுபற்றி எரியும்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், கடந்த 2023-... மேலும் பார்க்க

காத்மாண்டு விமான நிலையம் மறுஅறிவிப்பின்றி மூடல்!

நேபாளத்தில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரத்தை தொடர்ந்து, உச்சநீதி... மேலும் பார்க்க

இந்திய - நேபாள எல்லையில் உச்சகட்ட கண்காணிப்பு! எல்லையில் நுழைய கட்டுப்பாடு

நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள், சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக கலவரம் மூண்டநிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் உச்சகட்ட கண்காணிப்பு போடப்... மேலும் பார்க்க

நேபாள அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை: ராணுவம்

நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்து, கலவரமாக வெடித்ததைத்தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்த நிலையில், அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை என்று அந்நாட்டு ராணுவம... மேலும் பார்க்க