செய்திகள் :

பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை!

post image

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளினால் கைது செய்யப்பட்டு, தற்போது ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு மே 9 ஆம் தேதி, இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள், அந்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் வெடித்த வன்முறையால், பாகிஸ்தான் அரசின் முக்கிய கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் சூறையாடப்பட்டன.

இந்நிலையில், வன்முறையின்போது பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பு வாகனங்களின் மீது தீ வைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 17 பேருக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நேற்று (செப்.9) அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோட் லாக்பட் சிறையில் நீதிபதி மன்செர் அலி கில் வழங்கிய இந்தத் தீர்ப்பின் மூலம், இம்ரான் கானின் ஆதரவாளர்களும் பஞ்சாப் மாகாணத்தின் முன்னாள் அமைச்சர்களுமான யாஸ்மின் ரஷீத், மியான் மெஹ்மூத் ரஷீத், பஞ்சாப் முன்னாள் ஆளுநர் ஒமெர் சர்ஃப்ராஸ் சீமா மற்றும் இஜாஸ் சௌதரி ஆகியோருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் இருந்து முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி உள்பட 20 பேர் விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, 2023-ம் ஆண்டு நடைபெற்ற வன்முறையால், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காத்மாண்டு விமான நிலையம் மறுஅறிவிப்பின்றி மூடல்!

A Pakistani court has sentenced 17 supporters of former Prime Minister Imran Khan to 10 years in prison.

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு 79-இல் நீதி கிடைத்தது..!

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது 79-ஆவது வயதில் நீதி கிடைத்ததை பெண் சமூகம் கொண்டாடி வருகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பதிவானதொரு பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்மண... மேலும் பார்க்க

கத்தாரில் தாக்குதல்! அரபு நாடுகளையும் குறிவைக்கிறதா இஸ்ரேல்?

காஸாவில் நீடிக்கும் சண்டையைத் தொடர்ந்து, கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை(செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.கத்தார் தலைநகர் தோஹாவில்... மேலும் பார்க்க

நேபாள ஆணிவேர் சிங்கா மாளிகை தீக்கிரை! ஜென் ஸி கோபத்தின் விலை! தொடர்ந்து வந்த துயரம்!!

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்திருந்த சிங்கா அரண்மனை எனப்படும் அரசு மாளிகை, ஜென் ஸி இளைஞர்களின் கலவரத்தில், தீக்கிரையானது.ஆசியாவின் மிகப்பெரிய அரண்மனையை காவுவாங்கிவிட்டு, அதுபற்றி எரியும்... மேலும் பார்க்க

காத்மாண்டு விமான நிலையம் மறுஅறிவிப்பின்றி மூடல்!

நேபாளத்தில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, காத்மாண்டு சர்வதேச விமான நிலையம் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரத்தை தொடர்ந்து, உச்சநீதி... மேலும் பார்க்க

இந்திய - நேபாள எல்லையில் உச்சகட்ட கண்காணிப்பு! எல்லையில் நுழைய கட்டுப்பாடு

நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள், சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக கலவரம் மூண்டநிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் உச்சகட்ட கண்காணிப்பு போடப்... மேலும் பார்க்க

நேபாள அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை: ராணுவம்

நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்து, கலவரமாக வெடித்ததைத்தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்த நிலையில், அதிபர் ராமசந்திர பௌடேல் ராஜிநாமா செய்யவில்லை என்று அந்நாட்டு ராணுவம... மேலும் பார்க்க