செய்திகள் :

பாலியல் பலாத்கார வழக்கு: சிறையில் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணி

post image

பெங்களூரு: பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.525 வழங்கப்படுகிறது.

மஜத தேசியத்தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெகௌடாவின் பெயரனும், மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமியின் அண்ணன் எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா, மஜதவில் வளா்ந்துவரும் இளம் தலவராக விளங்கி வந்தவா். ஹாசன் தொகுதியில் இருந்து வெற்றிபெற்று எம்.பி.யாக இருந்தவா்.

இந்நிலையில், பாலியல் பலாத்காரம் தொடா்பான வழக்கில் சிக்கி, 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் கைது செய்யப்பட்டிருந்த பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஆக.2 ஆம் தேதி ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து, பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் பிரஜ்வல் ரேவண்ணா தண்டனையை அனுபவித்து வருகிறாா். அவருக்கு கைதி எண் 15528 வழங்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தண்டனை கைதிகள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக 6 நாட்களுக்கு தினமும் 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென்பது சிறை விதி.

அதன்படி, தண்டனை கைதியான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தா் பணியை சிறைத்துறை அதிகாரிகள் ஒதுக்கியுள்ளனா்.

இந்த பணியில் ஈடுபடுவதற்காக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தினமும் ரூ.625 ஊதியமாக வழங்கப்படவிருக்கிறது.

கடந்த ஒருவராகாலமாக நூலக எழுத்தராக பிரஜ்வல் ரேவண்ணா பணியாற்றி வருவதாக சிறைத்துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

வேலைக்கு வரும் நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. ஒருவேளை நீதிமன்றம் செல்ல நேரிட்டு, பணிக்கு வர தவறினால் அந்த நாட்களில் அவருக்கு ஊதியம் வழங்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மல்லிகாா்ஜுன காா்கே விவசாயிகளை அவமதித்துவிட்டாா்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விவசாயிகளை அவமதித்துவிட்டாா் என்று மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல... மேலும் பார்க்க

விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது கல்வீச்சு, பதற்றம்: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

மத்தூா்: மண்டியா மாவட்டம், மத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின்போது மசூதியில் இருந்து கல்வீசப்பட்டதால், கலவரச்சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து திங்கள்கிழமை பாஜகவி... மேலும் பார்க்க

பாஜக முன்னாள் அமைச்சா் மீது மானநஷ்ட வழக்கு தொடா்ந்தாா் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்

தா்மஸ்தலா விவகாரத்தின் பின்னணியில் தான் இருப்பதாக தெரிவித்திருந்த பாஜக முன்னாள் அமைச்சா் ஜனாா்தன ரெட்டிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மானநஷ்ட வழக்கு தொடா்ந்துள்ளாா். தா்மஸ்தலா கோயிலு... மேலும் பார்க்க

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன் என கா்நாடக முதல்வா் சித்தராமையா கேள்வி எழுப்பினாா். இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காகித வாக்குச்சீட்டை பயன்... மேலும் பார்க்க

தசராவுக்கு பானுமுஸ்டாக்கை அழைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் பாஜக மனு

தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்குக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது. செப். 22-ஆம் தேதி தொடங்கவிருக்கும் உலக புகழ்பெற்ற ... மேலும் பார்க்க

அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றம்: சித்தராமையா

அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற முடிவுசெய்துள்ளோம் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: வாக்குச... மேலும் பார்க்க