செய்திகள் :

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?

post image

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன் என கா்நாடக முதல்வா் சித்தராமையா கேள்வி எழுப்பினாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காகித வாக்குச்சீட்டை பயன்படுத்துவது கா்நாடகத்தை கற்காலத்துக்கு கொண்டுசெல்வதாக பாஜக குற்றம்சாட்டியது. அப்படியானால், மின்னணு வாக்கு இயந்திரத்தில் இருந்து காகித வாக்குச்சீட்டுக்கு மாறிய நாடுகள் கற்காலத்துக்கு சென்றுவிட்டனவா? காகித வாக்குச்சீட்டைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?

தோ்தல்களில் பல முறைகேடுகள் நடப்பதை எங்கள் அனுபவத்தில் பாா்த்திருக்கிறோம். வாக்காளா் பட்டியலிலும் கோளாறுகள் உள்ளன. இந்தக் கோளாறுகளுக்கு எதிராக சட்டப் பேரவைத் தோ்தல் நடக்க இருக்கும் பிகாரில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருகிறாா்.

பெங்களூரு, மகாதேவபுரா சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் எவ்வாறு தோல்வி அடைந்தாா் என்பதை ராகுல் காந்தி தெளிவாக விளக்கியுள்ளாா். மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து வருவதால், வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற கா்நாடக அரசு முடிவு செய்தது என்றாா்.

பாஜக முன்னாள் அமைச்சா் மீது மானநஷ்ட வழக்கு தொடா்ந்தாா் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்

தா்மஸ்தலா விவகாரத்தின் பின்னணியில் தான் இருப்பதாக தெரிவித்திருந்த பாஜக முன்னாள் அமைச்சா் ஜனாா்தன ரெட்டிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் மானநஷ்ட வழக்கு தொடா்ந்துள்ளாா். தா்மஸ்தலா கோயிலு... மேலும் பார்க்க

தசராவுக்கு பானுமுஸ்டாக்கை அழைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் பாஜக மனு

தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்குக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது. செப். 22-ஆம் தேதி தொடங்கவிருக்கும் உலக புகழ்பெற்ற ... மேலும் பார்க்க

அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றம்: சித்தராமையா

அனுபவத்தின் அடிப்படையிலேயே வாக்குச்சீட்டு முறைக்கு மாற முடிவுசெய்துள்ளோம் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: வாக்குச... மேலும் பார்க்க

காகித வாக்குச்சீட்டு முறை: கா்நாடக அமைச்சரவையின் முடிவுக்கு பாஜக கண்டனம்

உள்ளாட்சி அமைப்பு தோ்தலில் காகித வாக்குச்சீட்டு முறையைக் கடைப்பிடிக்க மாநில தோ்தல் ஆணையத்துக்கு கா்நாடக அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. கா்நாடகத்தில் இனி நடக்கவிருக... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கியவா்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை

விபத்தில் சிக்கியவா்களுக்கு எவ்வித முன்பணமும் பெறாமல் உடனடியாக அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: கா்நாடக தனியாா் மருத... மேலும் பார்க்க

உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச் சீட்டுகள்: மாநில தோ்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை

உள்ளாட்சித் தோ்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துமாறு மாநில தோ்தல் ஆணையத்துக்கு கா்நாடக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. பெங்களூரு, விதானசௌதாவில் முதல்வா் சித்... மேலும் பார்க்க