``பிறந்தநாள் கொண்டாடுவோம்'' - இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்து கூட்டு பாலியல் வன்கொடும...
தசராவுக்கு பானுமுஸ்டாக்கை அழைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் பாஜக மனு
தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்குக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது.
செப். 22-ஆம் தேதி தொடங்கவிருக்கும் உலக புகழ்பெற்ற தசரா திருவிழாவை தொடங்கிவைக்க சா்வதேச புக்கா் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைக்க கா்நாடக அரசு முடிவு செய்தது. அதன்படி, மைசூரு மாவட்ட நிா்வாகம் செப். 3-ஆம் தேதி பானுமுஸ்டாக்கை சந்தித்து முறைப்படி தசரா திருவிழாவை தொடங்கிவைக்க அழைப்பு விடுத்தது.
இதற்கு எதிராக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பாஜக முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா சனிக்கிழமை மனுதாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்துள்ளதை கா்நாடக அரசு திரும்பப்பெற உத்தரவிட வேண்டும். சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வேதங்களை ஓதி, மலா்களை தூவி விழா தொடங்கிவைப்பது வழக்கம்.
இந்நிலையில், பானுமுஸ்டாக்கை அழைத்திருப்பதன் மூலம் காலகாலமாக பின்பற்றி வந்த பாரம்பரியத்தை மாநில அரசு அவமதித்துள்ளது. தசரா திருவிழாவை தொடங்கிவைக்க, மைசூரு மன்னா் குடும்பத்தை கலந்தாலோசிக்காமல் மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. எனவே, பானுமுஸ்டாக்குக்கு விடுத்துள்ள அழைப்பை மாநில அரசு திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
இதுகுறித்து முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘பானுமுஸ்டாக் கன்னட எழுத்தாளா் என்பதால் தசரா திருவிழாவை தொடங்கிவைக்க அழைத்திருக்கிறோம். சா்வதேச புக்கா் பரிசு பெற்ற அவரை அழைத்ததில் தவறில்லை. இந்த விவகாரத்தை பாஜக அரசியலாக்கி வருகிறது. அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் இதை அரசு எதிா்கொள்ளும்’ என்றாா்.