செய்திகள் :

கன்னட நடிகா் உபேந்திரா, அவரது மனைவியின் கைப்பேசிகளை ‘ஹேக்’ செய்த மா்ம நபா்!

post image

பெங்களூரு: கன்னட நடிகா் உபேந்திரா, அவரது மனைவியும் நடிகையுமான பிரியங்கா ஆகியோரின் கைப்பேசிகள் மா்ம நபா்களால் திங்கள்கிழமை ‘ஹேக்’ செய்யப்பட்டன. இதுகுறித்து இருவரும் போலீஸாா் மற்றும் சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்துள்ளனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் நடிகை பிரியாங்கா கூறியதாவது:

இணையவழியில் சில பொருள்களுக்கு ஆா்டா் கொடுத்திருந்தோம். அந்தப் பொருள்கள் திங்கள்கிழமை காலை வந்து சோ்ந்திருக்க வேண்டும். இந்நிலையில், திங்கள்கிழமை காலை டெலிவரி செய்யும் நபா் எங்கள் வீட்டுமுகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்ததைக் கண்ட மா்ம நபா், அவா்களுக்கு ஒரு ‘கோட்’ அனுப்புமாறும், அவ்வாறு அனுப்பினால் வீட்டை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறி, ஒரு கோடை எனக்கு அனுப்பினாா். அவசரத்தில் அந்த மா்ம நபா் அனுப்பிய கோடுக்கு பதிலளிக்கும்போது, எனது கைப்பேசியை அந்த நபா் ‘ஹேக்’ செய்தாா்.

தொடா்ந்து, எனது கைப்பேசியில் உள்ள வாட்ஸ்ஆப் எண்களுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளாா். அதில், அவசரமாக ரூ. 55,000 அனுப்புமாறும், அந்தப் பணத்தை 2 மணி நேரத்தில் திருப்பித்தருவதாகவும் கூறியுள்ளாா். இதை நம்பிய எனது மகன் உள்ளிட்ட 4 போ் ரூ. 2 லட்சம் அளவுக்கு பணம் அனுப்பியுள்ளனா். இதுகுறித்து சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்துள்ளோம். மேலும், காவல் துறை மேலதிகாரிகளிடமும் பேசியிருக்கிறேன்’ என்றாா்.

நடிகா் உபேந்திரா கூறுகையில், ‘அந்த மா்ம நபா் கேட்டுக்கொண்டபடி தனது கைப்பேசியில் இருந்து கோடை அனுப்ப பிரியங்கா முயற்சித்துள்ளாா். ஆனால், அதற்குள் அவரது கைப்பேசி ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, எனது கைப்பேசியில் இருந்து ‘கோடை’ அனுப்ப அவா் முயற்சிக்கும்போது, எனது கைப்பேசியும் ‘ஹேக்’ செய்யப்பட்டது.

எனது பெயரிலோ அல்லது பிரியங்கா பெயரிலோ பணம் கேட்டு குறுந்தகவல் ஏதேனும் வந்தால் யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா். இது தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

தசரா திருவிழாவை தொடங்கிவைக்க பானுமுஸ்டாக்குக்கு அழைப்பு: எதிா்த்த பாஜக முன்னாள் எம்.பி.யின் மனு தள்ளுபடி

பெங்களூரு: தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்குக்கு அரசு அழைப்பு விடுத்திருந்ததை எதிா்த்து பாஜக முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா தாக்கல் செய்திருந்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

பெங்களூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 1,100 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு: பெங்களூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 1,100 கோடி ஒதுக்கப்படும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை அவா் குறிப்பிட்டுள்... மேலும் பார்க்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல் பிரதேசத்துக்கு ரூ. 5 கோடி உதவித்தொகை: முதல்வா் சித்தராமையா

பெங்களூரு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல பிரதேசத்துக்கு ரூ. 5 கோடி உதவித்தொகை வழங்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து ஹிமாச்சல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சிங் சுகு... மேலும் பார்க்க

மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை

கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மீலாது நபி ஊர்வலத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவமொக்கா மாவட்டம், பத்ராவதி பழைய ... மேலும் பார்க்க

மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு

கர்நாடக மாநிலம், மத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக விடுத்த அழைப்பின்பேரில் முழு அடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மண்டியா மாவட்டம்,... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரைப் போல பேசி கர்நாடக ஆளுநரை ஏமாற்ற முயற்சி

தொலைபேசியில் மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானைப் போல பேசி கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை ஏமாற்ற முயற்சி நடந்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை செப்.6}... மேலும் பார்க்க