செய்திகள் :

அன்புக்கரங்கள்: "குழந்தை தொழிலாளர்களாக மாறக் கூடாது என்பதற்காக இத்திட்டம்" - தங்கம் தென்னரசு

post image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அன்புக் கரங்கள் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு 173 மாணவ, மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.

பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை இழந்த 23 குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை மொத்தம் ரூ. 4.46 லட்சத்தை வழங்கினர்.

அப்போது நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள் செல்ல வேண்டுமென்பதே முதலமைச்சரின் நோக்கமாகும். அவருடைய மகத்தான திட்டம் “அன்புக்கரங்கள்“ ஆகும்.

தமிழக சட்டசபையில், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் என அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வகையில், ஆழ்ந்து, சிந்தித்து உருவாக்கிய திட்டம்தான் அன்புக் கரங்கள்.

இளம் வயதில் பள்ளி செல்லும் குழந்தைகள், தங்களது பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்தால், உளவியல் ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். கல்வியும் தடைபட்டு விடும்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

அந்த விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களின் வெற்றிடத்தை நிரப்பி, தொடர்ந்து கல்வியைக் கற்க ஊக்குவிக்கும் விதமாக நான் இருக்கிறேன். எனது கரங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் எனத் தனது அன்புக் கரங்களை தமிழக முதல்வர் நீட்டியுள்ளார். அவர்களுக்குத் தாயுமாகவும், தந்தையுமாகவும் நமது முதல்வர் இருந்து வருகிறார்.

எனவே, அவர்கள் கல்வியைத் தொடர்ந்திட மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தைத் துவக்கியுள்ளார். பட்டாசு ஆலை விபத்தில் பலியானோரின் குழந்தைகளின் கல்விக்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அவர்கள், குழந்தை தொழிலாளர்களாக மாறி விடக் கூடாது என்பதற்காகவும், எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவராக இருந்து உங்களது மன அழுத்தத்தை, துயரத்தைப் போக்கிடும் வகையில் இத்திட்டம் உள்ளது“ எனத் தெரிவித்தார்.

அன்புக்கரங்கள் நிகழ்ச்சி
அன்புக்கரங்கள் நிகழ்ச்சி

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், "நாம் ஆதரவற்றவர்களாக இருக்கிறோம். நமது தாய், தந்தையர் விட்டு விட்டு சென்றுவிட்டனர் என மனதளவில் மிகப் பெரிய பாதிப்பைப் பெற்றிருக்கின்றனர். ஆனால், நமது முதல்வர், நான் இருக்கிறேன் எனத் தனது அன்புக் கரங்களை நீட்டியுள்ளார்.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2 ஆயிரமும், இந்தியாவிலேயே நமது முதலமைச்சர் தான் இத்தகைய மகத்தான திட்டத்தைத் துவக்கியுள்ளார். அதற்குக் காரணம், நமது மாநிலம் கல்வியிலே சிறந்த மாநிலமாக இருக்கிறது. வறுமையினால் அந்தக் குழந்தைகளுக்குக் கல்வி இல்லாமல் போய் விடக் கூடாது.

அந்தக் குழந்தைகளின் திறமையெல்லாம் வெளிக் கொணர வேண்டும். அறிவார்ந்த, செயல்திறன் வாய்ந்த குழந்தைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக இம்மாதிரியான திட்டங்களை முதலமைச்சர் கொண்டு வந்திருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

திருச்சி மதிமுக மாநாடு: "என்னை விட்டு விலகியவர்களை நான் விமர்சித்ததில்லை" - வைகோ பேச்சு

ம.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அண்ணாவின் 117-வது பிறந்த நாளான நேற்று ம.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம், சிறு... மேலும் பார்க்க

Ind vs Pak: "ரூ.1.5 லட்சம் கோடிக்கு சூதாட்டம்; பாக்., போகும் பணம்" - சஞ்சய் ராவுத் MP சொல்வது என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று துபாயில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி பங்கேற்கக் கூடாது என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்தத... மேலும் பார்க்க

"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடியாது"-துரை வைகோ

ம.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், அண்ணாவின் 117-வது பிறந்த நாளான இன்று ம.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்ட... மேலும் பார்க்க

"காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் குடிநீர் குழாயில் காற்றுதான் வருகிறது" - விஜயபாஸ்கர் தாக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,"புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டங... மேலும் பார்க்க

"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"- நயினார் விளக்கம்

"ஆடிட்டர் குருமூர்த்தி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. 2026-ல் அதிமுக-பாஜக கூட்டணி திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும்" என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.ஜி.எஸ்.டி 2.0...பூத் கமிட்டி கூட்டத... மேலும் பார்க்க

"அம்மாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சியை மத்தியில் இருந்தவர்கள் காப்பாற்றினர்" - இபிஎஸ்

அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செப்டம்பர் 5-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்திருந்தார்.அந்தக் கடைசி நாளான ந... மேலும் பார்க்க