செய்திகள் :

``4 ஆண்டுகள் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை'' - உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்த மக்கள்

post image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உள்பட்டது கீரமங்கலம் கிராமம்.

இந்த கிராமத்தில், 45 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தண்ணீர்த் தொட்டி, கொத்தமங்கலம்–கீரமங்கலம் முதன்மைச் சாலை ஓரத்தில் கிராம மக்களுக்காக கட்டப்பட்டது.

காலம் கடந்ததால் அந்தத் தொட்டியின் தூண்கள் அரிந்து, தண்ணீர்த் தொட்டி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

மேலும், இந்தத் தொட்டி தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஆபத்தான நிலையில் உள்ள தண்ணீர்த் தொட்டி
ஆபத்தான நிலையில் உள்ள தண்ணீர்த் தொட்டி

மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை

அவ்வூரின் சமூக செயற்பாட்டாளரான சிகா. லெனின் அவர்களிடம் பேசியபோது,

"சாலையோரத்தில் மக்களுக்கு பயன்படாமலும், இடிந்து விழும் நிலையிலும் உள்ள இந்தத் தண்ணீர்த் தொட்டியை அகற்றக் கோரி நான் பலமுறை கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினேன்.

இருந்தபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் குறைதீர் மனுநீதி முகாமிலும் மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை.

இணையவழி முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம், திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் என எல்லா வழிகளையும் அறவழியில் கடைபிடித்து,

கடந்த 4 வருடங்களாக பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என மிகுந்த மனவேதனையுடன் கூறினார்.

உபயோகத்தில் இல்லாத தண்ணீர்த் தொட்டி அருகே பேருந்து நிறுத்தமும் உள்ளதால் ஏதாவது உயிர் சேதம் ஏற்பட்டுவிடுமோ எனவும் ஊர்மக்கள் பயப்படுகிறார்கள் என்றும் கூறினார்.

கடந்த 13/7/2025 அன்று இது தொடர்பாக திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகள் 10 தினங்களில் பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் தொட்டியை அகற்றி விடுவதாக எனக்கு உறுதி அளித்திருந்தனர். ஆனால் இதுவரையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மிகுந்த மன வருத்தத்துடன் லெனின் கூறினார்.

ஆபத்தான நிலையில் உள்ள தண்ணீர்த் தொட்டி

ஆதலால் லெனின் மற்றும் கீரமங்கலம் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் வருகின்ற 16/09/2021 ஆம் தேதி முதல் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக காலவரையற்ற உண்ணா நிலை அறப்போராட்டம் தொடங்க போவதாக கூறினார். மேலும் கீரமங்கலம் கிராம மக்கள் அனைவரும் உபயோகத்தில் இல்லாத தண்ணீர் தொட்டியை அகற்ற வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை ஏற்காத தமிழக அரசை எதிர்த்து உண்ணா நிலை போராட்டத்தை தொடங்க உள்ளதாகவும் கூறினர்.

எனவே, ஆபத்தான தண்ணீர்த் தொட்டியை அகற்றக் கோரிக்கை விடுத்தும், அதை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்கிற அரசைக் கண்டித்து, திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊர்மக்கள் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``விஜய் இப்போது தானே முதல் சுற்று வந்துள்ளார், அடுத்த சுற்றில் பார்ப்போம்'' - அமைச்சர் KKSSR

விருதுநகரில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக முதல்வர் முன்னெடுத்துள்ள ஓரணியில் தமிழ்நாடு என்ற தி.மு.க-வின் முன்னெடுப்பில் 1 கோடி குடு... மேலும் பார்க்க

Charlie Kirk கொலை: அரை கம்பத்தில் அமெரிக்க கொடி; எதிர்கட்சியினர் சொல்வது என்ன?

அமெரிக்காவின் உதா பல்கலைக்கழகத்தில் அதிபர் ட்ரம்ப்பின் கூட்டாளியான சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டார். Charlie Kirk மற்றும் Turning Point USAசார்லி கிர்க் ஒரு வலதுசாரி பழமைவாத செயற்பாட்டாளர் ஆவார். ... மேலும் பார்க்க

பாமக: ``நம் பிரதமர் மோடிகூட என்னை சந்தித்தால் கட்டி அணைத்துக்கொள்வார்'' - ராமதாஸ் சொல்வதென்ன?

பா.ம.க-வில் கடந்த சில மாதங்களாகவே தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்குமிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்புமே தாங்கள்தான் கட்சித் தலைவர் எனச் சொல்லி வருகின்றன. இதனால் அங்கு பல்வேறு குழப்பங்க... மேலும் பார்க்க

VP Election: `15 ஓட்டு; கணித ரீதியான வெற்றி; எதிர்க்கட்சிகள் கூட்டணி பலப்பட்டிருக்கிறது' – காங்கிரஸ்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஜக்தீப் தன்கர் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.இதனால், மாநி... மேலும் பார்க்க

Exclusive: ``வைகோ 100 முறை தாயகத்தில் சத்தியம் செய்தார்; காப்பாற்றவில்லை'' - மல்லை சத்யா சொல்வதென்ன?

ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் சில காலமாகவே கருத்து மோதல் நிலவி வந்தது. இதற்கிடையில், மல்லை சத்யா கட்சியிலிரு... மேலும் பார்க்க

``எச்சரிக்கை, கவனமாக கேளுங்கள்; காசாவில் இருந்து உடனே கிளம்புங்கள்'' - தாக்குதலை அதிகரித்த நெதன்யாகு

நேற்று இஸ்ரேல் ஜெரூசேலத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது.கூட்டமான பேருந்தில் ஏறிய இரண்டு பாலஸ்தீனிய தீவிரவாதிகள் தூப்பாக்கி சூடு நடத்தியதாக தகவவல் வெளியானது. இந்தச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 6 ப... மேலும் பார்க்க