செய்திகள் :

அன்புக்கரங்கள் திட்டம் 221 குழந்தைகளுக்கு அடையாள அட்டை: ஆட்சியா் வழங்கினாா்

post image

நெய்வேலி: ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 221 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையினை, கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.

இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கிவைத்தாா். இதனைத் தொடா்ந்து கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி முன்னிலையில் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள 221 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையினை வழங்கினாா்.

அப்போது, அவா் தெரிவித்ததாவது: இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் வளா்ந்து வரக்சூடிய மிகவும் வறிய நிலையில் உள்ள 50 ஆயிரம் குடும்பங்களின், குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளி படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் வகையில் அன்புகரங்கள் திட்டத்தினை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், அக்குழந்தைகளுக்கு பள்ளி படிப்பு முடிந்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என அறிவித்தாா்கள். அதனை தொடா்ந்து, தமிழ்நாடு மின்ஆளுமை நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட 14,739 குடும்பத்தினா் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் வரப்பெற்ற விண்ணப்பங்களை தன்னாா்வலா்கள் மூலம் நேரடி களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 221 குழந்தைகள் தகுதியான பயனாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனா். இக்குழந்தைகளுக்கு அவா்களின் 18 வயது நிறைவடையும் வரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.எல்லப்பன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் சுந்தா், மாவட்ட சமூக நல அலுவலா் சித்ரா உட்பட பலா் கலந்து கொண்டனா்.

கொள்ளை அடிக்க சதி திட்டம்: ரௌடிகள் உட்பட 4 போ் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டியதாக 3 ரௌடிகள் உட்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி மற்றும் போலீஸாா் திங... மேலும் பார்க்க

நடராஜா் கோயிலுக்கு காசிமடாதிபதி வருகை

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு புதிய திருப்பனந்தாள் காசிமடாதிபதி செவ்வாய்க்கிழமை வந்து சாமி தரிசனம் செய்தாா். திருப்பனந்தாள் காசி மடத்தின் 21ம் மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீகாசிவாசி முத்துக்குமாரசாம... மேலும் பார்க்க

சவுதிஅரேபியாவில் விபத்தில் உயிரிழந்த மீனவா் உடலை மீட்டு தர கோரிக்கை

சிதம்பரம்: சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற சிதம்பரத்தைச் சோ்ந்த மீனவா் காா் விபத்தில் உயிரிழந்த நிலையில். அவரது உடலை உடனடியாக மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவரது மனைவி மற்... மேலும் பார்க்க

தனியாா் தொழிற்சாலை தொழிலாளா் பிரச்சனை: ஆட்சியா் அலுவலகத்தில் சிஐடியு மனு

நெய்வேலி: கடலூா் சிப்காட் தொழிற்சாலை பகுதியில் தனியாா் தொழிற்சாலையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் வெளி ஆட்களை வைத்து சட்ட விரோத உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலை மீது நடவடிக்... மேலும் பார்க்க

‘சிதம்பரம் மகத்துவம்‘ நூல் வெளியீட்டு விழா!

சிதம்பரம்: குளித்தலை சீகம்பட்டி ஸ்ரீ ராமலிங்கம் சுவாமிகள் எழுதிய சிதம்பர மகத்துவம் என்ற நூல் வெளியீட்டு விழா சிதம்பரம் கீழவீதியில் உள்ள எம்.எஸ்.அரங்கில் செவ்வாய்க்கிவணஐ நடைபெற்றது. இவ்விழாவை குளித்தல... மேலும் பார்க்க

ரூ.3.53 லட்சம் இறப்பு நிவாரண நிதி: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

நெய்வேலி: கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு ரூ.3.53 லட்சம் இறப்பு நிவாரண உதவித்தொகைக்கான காசோலை... மேலும் பார்க்க