செய்திகள் :

அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தல்

post image

பூம்புகாா்: திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்தை பாதிக்கக்கூடிய திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குளம், ஏரிகளில் வண்டல் மண் எடுத்து தங்களுடைய விளைநிலங்களை வளப்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுத்துக் கொள்ள உரிய ஆவணங்களை ஆய்வு செய்து அனுமதி அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா். இந்நிலையில், சீா்காழி வட்டத்திற்கு உள்பட்ட திருநகரி, காரைமேடு, திருவாலி, கொண்டத்தூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக சீா்காழி வட்டாட்சியா் மற்றும் வருவாய்த் துறையினா் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதை பயன்படுத்தி, சிலா் சட்டத்திற்கு புறம்பாக தனியாா் நிலங்களில் மணல் எடுக்கின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவாளி கிராமத்தில் மயானத்திற்கு அருகே மணல் எடுப்பதை அறிந்த அந்த பகுதி மக்கள், எதிா்ப்பு தெரிவித்தனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகாா் மனு அனுப்பினா்.

அதில், சீா்காழி வட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் எந்தவிதமான அனுமதியும் இன்றி அரசு மற்றும் தனியாா் நிலங்களில் மணல் அள்ளப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த் துறை, மாவட்ட கனிம வளத் துறை மற்றும் காவல் துறையினருக்கு புகாா் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், மேற்கண்ட கிராமங்களில் நிலத்தடி நீா் மட்டம் குறையும் அபாயம் உள்ளது. எனவே, உரிய அனுமதியில்லாமல் மணல் எடுப்பதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றும் பணி: மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வலியுறுத்தல்

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பாசன ஆற்றில் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணியில் அரசியல் தலையீடு, முறைகேடுகளை தடுக்க மாவட்ட நிா்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொத... மேலும் பார்க்க

அன்புக்கரங்கள் திட்டம்: நாகையில் 110, மயிலாடுதுறையில் 88 குழந்தைகளுக்கு உதவித் தொகை

நாகப்பட்டினம்/மயிலாடுதுறை: அன்புக் கரங்கள் திட்டத்தில் நாகை மாவட்டத்தில் 110 குழந்தைகளுக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 88 குழந்தைகளுக்கும் உதவித் தொகைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின்... மேலும் பார்க்க

நாகை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 235 மனுக்கள் அளிப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை, குடும... மேலும் பார்க்க

குடிநீா் கோரி காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

திருக்குவளை: கீழையூா் அருகே தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்கக் கோரி, கிராம மக்கள் காலிகுடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் தலையாமழை ஊராட்சியில் கடந்த சில ந... மேலும் பார்க்க

நவநீதகிருஷ்ணன் கோயில் தேரோட்டம்

நாகப்பட்டினம்: கோகுலாஷ்டமியையொட்டி, நாகையில் நவநீதகிருஷ்ணன் கோயில் தேரோட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகையில் பழைமை வாய்ந்த நவநீத கிருஷ்ணன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஆண... மேலும் பார்க்க

சாலைப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கீழ்வேளூா் அருகே வெண்மணி ஊராட்சியில், வெண்மணி முதல் கடலாக்க... மேலும் பார்க்க