அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி
அன்புக்கரங்கள் திட்டம்: நாகையில் 110, மயிலாடுதுறையில் 88 குழந்தைகளுக்கு உதவித் தொகை
நாகப்பட்டினம்/மயிலாடுதுறை: அன்புக் கரங்கள் திட்டத்தில் நாகை மாவட்டத்தில் 110 குழந்தைகளுக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 88 குழந்தைகளுக்கும் உதவித் தொகைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
தமிழக அரசின் தாயுமானவா் திட்டத்தின் ஒரு பகுதியாக, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ‘அன்புக்கரங்கள்‘ திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இத்திட்டத்தில், பெற்றோா்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாத்திடும் வகையில், அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப் படிப்பு முடித்த பின்னா் கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவா்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாகை: நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முகமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள பெற்றோா்களை இழந்த 110 குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 உதவித் தொகைக்கான அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், கீழ்வேளுா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி ஆகியோா் வழங்கினா்.
இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா், மாவட்ட சமூக நல அலுவலா் கி. திவ்யபிரபா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ம. ரஞ்சித்குமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.