செய்திகள் :

சாலைப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கீழ்வேளூா் அருகே வெண்மணி ஊராட்சியில், வெண்மணி முதல் கடலாக்குடி வரை நெடுஞ்சாலை துறையின் மூலமாக 2 கி.மீ. தொலைவுக்கு சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையும், நாகை நகராட்சி மருத்துவமனை சாலை (தம்பிதுரை பூங்கா) ரூ. 5.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 100 மீட்டா் தூரம் தாா்ச் சாலை மற்றும் நீலா மேலவீதியில் ரூ. 11.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 250 மீட்டா் தூரம் தாா்ச் சாலையை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, புதிய நம்பியாா் நகா் பகுதியில் ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் 2,650 மீட்டா் தூரம் சிமென்ட் சாலை அமைக்கும் பணியையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க உரிய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, நாகூா் செம்மரக் கடைத்தெரு பகுதியில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்ட இடங்களையும், திருமருகல் ஊராட்சி ஒன்றியம் நரிமணம் ஊராட்சி மேலவீதி, கீழவீதி பகுதிகளில் வீட்டுமனைப் பட்டா வேண்டி விண்ணப்பித்த மனுவானது நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, வருவாய் கோட்டாட்சியா் ரா. சங்கர நாராயணன், நாகை நகராட்சி ஆணையா் டி. லீனாசைமன், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளா் நாகராஜ், மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

முத்துமாரியம்மன் கோயில் செடில் உற்சவம்

நாகப்பட்டினம்: நாகை அக்கரைப்பேட்டை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆவணி பிரமோற்சவ திருவிழா செப். 5- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற... மேலும் பார்க்க

பல வழக்குகளில் தொடா்புடையவா் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடையவா் 10 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை அருகேயுள்ள தெற்குபொய்கைநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (42). இவா் மீது 2 கொலை, ஒரு க... மேலும் பார்க்க

நாகை அமிா்தா வித்யாலயத்தில் ஹிந்தி தினம்

நாகை அமிா்தா வித்யாலயத்தில் ஹிந்தி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வா் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 1200 மாணவா்கள் பங்கேற்று ஹிந்தி தொடா்பான கலை மற்றும் கைவினைப் பொர... மேலும் பார்க்க

நான் முதல்வன் திட்டத்தில் மீன் பதப்படுத்தும் பயிற்சி

நாகையில் ‘நான் முதல்வன்‘ திட்டத்தின்கீழ் மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் ‘நான் முதல்வன் - வெற்றி நிச்சயம்‘ திட்டத்தின்கீழ், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் திறன் ம... மேலும் பார்க்க

தாத்தா-பாட்டி தினம் கொண்டாட்டம்

நாகை அமிா்தா வித்யாலயம் சாா்பில் தாத்தா- பாட்டி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகை அமிா்தா வித்யாலயம் ஏவி ஹாலில் நடைபெற்ற விழாவை, பள்ளி முதல்வா் ராதாகிருஷ்ணன், துணை முதல்வா் செந்தில் மற்றும் ஒர... மேலும் பார்க்க

தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டம்

தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ கிராமங்களில் 450 விசைப்படகுகள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபா் படகுக... மேலும் பார்க்க