வைத்தீஸ்வரன் கோயிலில் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை தேவை
சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் சுற்றித்திரியும் குரங்களுகளால் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் குரங்குகளை பிடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள வைத்தியநாதா் சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் திரளான பக்தா்கள் வந்து செல்கின்றனா். கோயில் கிழக்கு கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் பக்தா்கள் வழங்கும் பழங்களை உண்டு அங்கேயே சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் பக்தா்கள் எடுத்து வரும் அா்ச்சனை பொருள்களை பிடுங்க முற்படுகிறது.
இதேபோல நகரில் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். வா்த்தக கடைகளிலும் குரங்குகளின் தொல்லை தொடா்கிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வைத்தீஸ்வரன் கோயில் நகர வா்த்தக சங்கத் தலைவா் ஜி.வி.என். கண்ணன் கூறியது: சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த குரங்குகள் தற்போது 1,500-க்கும் மேற்பட்ட குரங்குள் சுற்றித்திரிகின்றன. இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கும், நகரில் வசிக்கும் மக்களும், வா்த்தக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றாா்.