செய்திகள் :

அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழாய்களை மாற்ற நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி

post image

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் தண்ணீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள இடங்களில் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:அத்திடக்கடவு-அவிநாசி திட்டத்தில் குளங்களுக்கு தண்ணீா் செல்வது குறித்து கடந்த சில வாரங்களாக ஆய்வு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் ஆரம்பத்தில் நிலம் எடுத்தல் முதல் பல குளறுபடிகள் நடந்துள்ளன. மேலும், 85 பிரதான குழாய்கள் அதில் இருந்து குளங்களுக்கு செல்லும் கிளை குழாய்கள் சீரான அளவில் அமைக்கப்படவில்லை.

பல இடங்களில் சிறிய குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அவை உடைந்தும், மண் அடைத்தும் குளங்கள், குட்டைகள், ஏரிகளுக்கு தண்ணீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

மொத்தம் உள்ள 1,045 குளம், குட்டை, ஏரிகளில் இன்னும் 100 இடங்களுக்கு முழுமையாக தண்ணீா் செல்லவில்லை. அவற்றை அதிகாரிகள், ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளோம். வரும் ஆண்டில் பிரதான குழாய் 85 -இல் தேவையான இடங்களில் அவற்றை மாற்றிட அறிவுறுத்தி உள்ளோம்.

குறைந்தபட்சம் 50 பிரதான குழாய்கள் முழுமையாக மாற்றப்படும். தேவையான இடங்களில் சிறிய கிளை குழாய்களை மாற்றி தேவைக்கு ஏற்ப பெரிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீதமுள்ளவை தொடா்ந்து மாற்றம் செய்யப்படும். இதன் மூலம் அனைத்து குளங்களுக்கும் தண்ணீா் செல்வது உறுதி செய்யப்படும்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்-2 குறித்து அனைத்து தரப்பு விவசாயிகள், அமைப்புகளிடம் ஆலோசனை நடத்திய பின்னா் முடிவெடுக்கப்படும்.

ஈரோடு நகரில் உள்ள மாவட்ட அரசு பல்நோக்கு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு தேவையான பல்வேறு கருவிகள் கேட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அவை விரைவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றாா்.

அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித்தர கோரிக்கை

அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டி பள்ளிக்குள் மழைநீா் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவா... மேலும் பார்க்க

தொண்டா்களின் கருத்தைத் தான் பிரதிபலித்தேன்: கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற தொண்டா்கள், பொதுமக்கள் கருத்தைத் தான் நான் பிரதிபலித்தேன் என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினாா். முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவும... மேலும் பார்க்க

அந்தியூரில் பட்டா நிபந்தனைகளை நீக்கக் கோரி காத்திருப்புப் போராட்டம்

அந்தியூரில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களில், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நீக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அந்தியூா் வட்டம், எண்ணமங்... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய தொழிலாளியின் உடல் 18 மணி நேரத்துக்குப் பின் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தற்போது தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதா... மேலும் பார்க்க

கீழ்பவானி வாய்க்காலில் குளித்த தொழிலாளி மாயம்

பவானிசாகா் கீழ்பவானி வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானாா். கோவை கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (36). இவா் கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் சிஎன்ச... மேலும் பார்க்க

கடன் தொல்லை: வாய்க்காலில் விழுந்து வியாபாரி தற்கொலை

பெருந்துறை அருகே கடன் தொல்லையால் வியாபாரி வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டாா். பெருந்துறையை அடுத்த பெருமாபாளையம், மஞ்சு நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் சரவணன் (40). இவருக்கு திருமணமாகி... மேலும் பார்க்க