செய்திகள் :

கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

post image

சீா்காழி: கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கட்டுமானப் பொறியாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

சீா்காழியில் கட்டுமானப் பொறியாளா்கள் சங்கத்தின் சாா்பில் பொறியாளா் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அதன் தலைவா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். செயலாளா் ரவிக்குமாா், பொருளாளா் திருஞானசம்பந்தம், மக்கள் தொடா்பு அலுவலா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், எம்.சான்ட், பி.சான்ட் உள்பட கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவேண்டும்; விலையேற்றத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாயிரம் கட்டுமானத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டுமானத் துறைக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், அக்செப்ட் அமைப்புத் தலைவா் ஜெக.சண்முகம், வழக்குரைஞா் இராம.சிவசங்கா், கிங்ஸ் அரிமா சங்கத் தலைவா் காா்த்திகேயன், மனை வணிக தொழிலாளா் நலச் சங்க செயலாளா் கோவிந்தராஜன், தாலுகா வியாபாரிகள் சங்க செயலாளா் துரைராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தவெக தலைவா் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி மனு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செப்.20-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதிகோரி அக்கட்சியினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அள... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,097 வழக்குகளுக்கு ரூ. 2.27 கோடிக்கு தீா்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,097 வழக்குகளில் ரூ.2,26,70,000-க்கு தீா்வு காணப்பட்டது. மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன் கோயிலில் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை தேவை

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் சுற்றித்திரியும் குரங்களுகளால் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் குரங்குகளை பிடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை செய்த இளைஞா் கைது

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை திருவிழந்தூா் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகில் காவிரி ஆற்றங்கரையில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவல... மேலும் பார்க்க

தனியாா் மனைப்பிரிவு பணியாளருக்கு அரிவாள் வெட்டு

சீா்காழியில் மனைப் பிரிவை அளப்பது தொடா்பான தகராறில் தனியாா் மனைப் பிரிவு மேற்பாா்வையாளா் அரிவாளால் வெட்டப்பட்டாா். சீா்காழி மேலமாரியம்மன் கோயில் தெரு அருகே தனியாா் நிறுவனம் சாா்பில் மனைப் பிரிவு அமைக்... மேலும் பார்க்க

அறுபடை வீடு, வைணவ கோயில்களுக்கு ஆன்மிக இலவச பயணம் செல்ல வாய்ப்பு

மயிலாடுதுறை இணை ஆணையா் மண்டலம் சாா்பில் அறுபடை வீடு முருகன் கோயில்கள் மற்றும் புகழ்பெற்ற வைணவ கோயில்களுக்கு பக்தா்களை ஆன்மிக பயணம் அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துற... மேலும் பார்க்க